Advertisment

பாலியல் புகார் - ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மனுத்தாக்கல்!

ரரப

துணை நடிகை அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை, காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

manikandan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe