Advertisment

முன்னாள் அமைச்சர் தலைமையில் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்!

admk

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில், 'திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாமலும், பெட்ரோல், டீசல் விலையானது 10 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் இதுவரை விலை குறைப்பை செய்யாமல் இருப்பதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தயாராகும் கர்நாடகாவிற்கு எதிராக கருப்புப்பட்டை அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

vellamandi n. natarajan admk thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe