Skip to main content

இளம்பெண்ணை கடத்த முயன்ற முன்னாள் காதலன்; கால் டாக்சி ஓட்டுனருடன் கைது

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

An ex-boyfriend who tried to kidnap a young woman; Call taxi driver arrested

 

கால் டாக்ஸியில் போலியான நம்பரை பொருத்தி இளம் பெண்ணை இளைஞர் கடத்த முயன்ற சம்பவத்தில் கடத்தப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை திருவான்மியூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் பிரசாந்த் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பிரசாந்தின் நடவடிக்கை பிடிக்காததால் பவித்ரா அவரை விட்டு விலகிவிட்டார். இதனால் பவித்ராவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த பிரசாந்த் கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை அணுகி காதலியை கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கார் நம்பர் பிளேட்டை மாற்றிய பிரசாந்த், கால் டாக்சி ஓட்டுனருடன் பவித்ரா பணியாற்றும் இடத்திற்கு சென்றுள்ளார்.

 

வேலை முடிந்து வெளியே வந்த பவித்ராவை இருவரும் கடத்த முயன்றனர். அதேநேரம் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் பவித்ராவை கூட்டிச்செல்ல அவரது தாயும் அங்கே வந்திருந்தார். மகளை வலுக்கட்டாயமாக இருவர் காரில் ஏற்ற முயன்றதைக் கண்டு கூச்சலிட்ட பவித்ராவின் தாயை பிரசாந்த் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அங்கு கூடிய பொதுமக்கள் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் பிரசாந்தை பிடிக்க முயன்றனர். கார் டாக்ஸி ஓட்டுநர் ஹனிபா மட்டும் பிடிபட்ட நிலையில் பிரசாந்த் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவத்தில் பிரசாந்தையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.