Skip to main content

“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி!” - எ.வ.வேலு பேச்சு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

E.V.Velu talk Tailoring School is to create a good society

 

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, தனது தொகுதி மக்களுக்காக திருவண்ணாமலை நகரில் இலவச தையற்பயிற்சிப் பள்ளியை 2015ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான மகளிர், பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில், கரோனாவால் மூடிவைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பள்ளி, சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் செயல்படத் துவங்கியது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. அதனையொட்டி, முன்னால் அமைச்சர் எ.வ.வேலு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசும்போது, “இந்த தையற் பயிற்சிப் பள்ளி துவங்கி 6ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 5,000க்கும் மேற்பட்ட சகோதரிகள் பயிற்சி முடித்து, சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.

 

E.V.Velu talk Tailoring School is to create a good society

 

ஒரு நாளைக்கு 4 தொகுப்பு முறையில் 6 மாதப் பயிற்சியாக இங்கு தையற் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த தையற் பயற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவும், வெளியில் சென்றும் வேலைசெய்து தன்னுடைய குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். ஆண்களைவிட, பெண்கள் எப்போதுமே திறமையானவர்கள், காரணம் எப்பொழுதுமே 10 வகுப்பு பொதுத் தேர்விலும் சரி, 12 வகுப்பு பொதுத் தேர்விலும் சரி முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண்கள் பெறுபவர்கள் யார் என்று பார்த்தால் மாணவிகளாகத்தான் இருப்பார்கள். மூன்றாம் மதிப்பெண்கள்தான் மாணவர்கள் இருப்பார்கள்.

 

ஒரு காலத்தில் பெண்களை, ஆண்கள் அடக்கி ஆள்கிற நிலை இருந்தது. அப்போது நமக்கு கிடைத்தவர்தான் தந்தை பெரியார். 'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற பழமொழியை மாற்றி, அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார். ஒவ்வொரு பெண்ணும் படித்தால்தான் அந்த குடும்பம் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்று கூறினார். தையற் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தருவதன் மூலம் அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

 

ஒவ்வொரு குடும்பத் தலைவியின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த தையற் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்த தையற் பயிற்சிப் பள்ளியை மென்மேலும் விரிவுபடுத்தும் எண்ணமும் எனக்கு உண்டு” என்றார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ, டாக்டர் அனுராதா ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் செல்லங்குப்பம் சுப்பிரமணியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.