Skip to main content

’நான் பஞ்சம் பிழைக்க வந்து தேனி மாவட்டத்தையே விலைக்கு வாங்கி சுருட்டியவன் இல்லை..’- ஈவிகேஎஸ்.இளங்கோவன் 

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

தேனி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார்.
    

ev

   

பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் பிரிவு தலைவர் முக்கையா முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முரளி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செல்வேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன், மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் சந்திரன்(மதிமுக), வெஙக்டேசன்(சிபிஎம்), நாகரத்தினம்(விசிக கிழக்கு),சுருளி(விசிக மேற்கு), வல்லரசு(பார்வர்டு பிளாக்), அம்ஜத்(மனிதநேயமக்கள் கட்சி), பெத்தாட்சி(சிபிஐ), நூர்முகமது(முஸ்லீம் லீக்), தமிழன்பன்(ஆதிதமிழர் பேரவை), பால்பாண்டி(வாழ்வுரிமை), துரைராஜ்(எம்.ஜி.ஆர் கழகம்), ரகுநாகநாதன்(திக) உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

இக் கூட்டத்தில் பேசிய தேனி பாராளுமன்ற வேட்பாளர் ஈ.வி.கே .எஸ்.இளங்கோவனோ,   ‘’நான் இங்கு தேனி பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகின்றேன்.    தேர்தல் முடியும்வரை மட்டும் இல்லை தேர்தல் முடிந்த பின்னரும் நான் இங்கு தான் இருப்பேன்.  உங்கள் குறைகளை தீர்ப்பதற்காக பாடுபடுவேன்.   அதிமுக கூட்டணி ஒரு சவ ஊர்வலம் செல்லும் கூட்டணியாக உள்ளது. அவர்கள் ஒரு பாடை கட்டியுள்ளனர். அந்த பாடையில் பாஜகவை பிணமாக வைத்துள்ளனர். அந்த பாடையை தூக்குவதற்கு ஒருபுறம் அதிமுகவும் , மற்றொரு புறம் ராமதாஸ் உள்ளார். பின்னால் ஒரு புறம் விஜயகாந்தும் மற்றொரு புறம் ஏ.சி.சண்முகமும் உள்ளனர். சங்கு ஊதுவதற்கு வாசன் மற்றும் மணியடிப்பதற்க ஏ.சி.சண்முகம் உள்ளனர். எனவே இவர்கள் பாடையை தூக்கி சென்று சுடுகாட்டிற்கு சென்று அங்கு பணமாகி பாஜகவை புதைத்து விட்டு அங்கேயே இவர்கள் அனைவரும் அடக்கம் ஆகும் கூட்டணி அஇஅதிமுக கூட்டணியாகும்.

 

ev


 நான் ஈரோட்டிலிருந்து சமுக புரட்சி வெடித்து வந்தவன்.   ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன் இல்லை, பஞ்சம் பிழைக்க வந்து தேனி மாவட்டத்தையே விலைக்கு வாங்கி சுருட்டியவனும் இல்லை.  சாதனைகளை சொல்லுங்கள், அரசியல் பேசுங்கள் ,பேசுவோம் அதை விடுத்து தனித்தன்மையை பேசாதீர்கள்.

 

பிஞ்சிலே பழுத்தவர்கள் எங்களோடு விளையாட வேண்டாம், உங்களுடைய குழந்தைகள் சுபிட்சமாக வாழ தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.     இந்தியாவில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும், ஆகவே எதிரணிக்கு டெபாசிட் கூட வழங்க கூடாது. இது சாதாரண தேர்தல் கிடையாது, ரு100க்கும் 200க்கும் லட்சத்திற்கும் வாக்களிக்க வேண்டாம் முந்தானை முடிச்சில் களவாண்ட தொகையை உங்களுக்கு அளிக்கின்றார்கள்.  

 

  இளங்கோவன் ஒன்றும் தேனியில் பஞ்சாயத்து கட்டப்பஞ்சாயத்து பண்ணுபவன் அல்ல, கட்டப்பஞ்சாயத்து செய்து இன்னொருவருடைய பணத்தை பறிப்பவனும் அல்ல. எனவே இந்த தேர்தலில் எதிரணிக்கு மரண அடி  கொடுங்கள்’’ என்று கூறினார்
.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.