Skip to main content

பதவியேற்ற அன்று மாலையே கவச உடை அணிந்து கரோனா வார்டுக்கு சென்று ஆய்வுசெய்த பெண் ஐ.ஏ.எஸ்!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
On the evening of the joining , the woman wearing armor went to the Corona ward and inspected the IAS !!

 

நாமக்கல் மாவட்டத்திற்குப் புதிய கலெக்டராக ஸ்ரேயா சிங் 17ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, அவர் உடனடியாக அன்று மாலையில் அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோனா நோய்தொற்று நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்து அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து இதுவரை நடைபெற்ற நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.

 

பிறகு அங்குள்ள கரோனா வார்டுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்றார். அப்போது, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு குறித்து சி.டி ஸ்கேன் அறிக்கை, தொற்றின் தன்மை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்கள் கலெக்டருக்கு விளக்கினார்கள். அப்போது நோயாளிகளிடம் பேசிய அவர், மருத்துவர்களும் செவிலியர்களும் வார்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கிறார்களா? எனக் கேட்டார்.

 

மருத்துவ உதவி உடனுக்குடன் நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்தார். மேலும் உணவு வழங்கப்படுவது குறித்தும், தரம் மற்றும் சுவையின் திருப்தி குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உடனிருந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் இந்த நோய் தொற்றுக்குள்ளான மக்களிடம் நேரில் சென்று நம்பிக்கை கொடுத்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.