Skip to main content

''மகிழ்ச்சியான விஷயம், தொற்று குறைந்திருந்தாலும் கூட...'' - அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி! 

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

 '' Even though the contagion of happy things has decreased ... '' - Minister Ma Subramaniam interview!

 

சென்னை, திருவான்மியூரில் தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில்,

 

''தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 10, 20 என்ற வகையில் தொற்று கூடியிருக்கிறது. ஒருசில மாவட்டங்களில் 2, 3 என்ற அளவில் நேற்றைக்கும் இன்றைக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் 4,506 ஆக இருந்த கரோனா தொற்று 4,481 ஆக குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பொருத்தவரை 20, 25 என்ற எண்ணிக்கையில் குறைந்திருக்கிறது. ஆனால் உள்ளே சென்று பார்க்கும்போது மாவட்ட எண்ணிக்கையில் ஒருசில மாவட்டங்களில் 10, 20 என  எண்ணிக்கை கூடியிருக்கிறது. 

 

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் துறை நிர்வாகிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடலூருக்கு நாளை நான் செல்ல இருக்கிறேன். நாளை மறுநாள் திங்கட்கிழமை திருவண்ணாமலைக்கு நானும் துறைச் செயலாளரும் செல்ல இருக்கிறோம். எதனால் கூடுகிறது என ஆய்வு செய்ய இருக்கிறோம். ஆனால், மகிழ்ச்சியான விஷயம் 4,500 என்ற அளவில் தொற்று குறைந்திருந்தாலும் கூட கரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் செய்யப்பட்டு வருகிறது.

 

கடந்த ஆட்சியில் எண்ணிக்கை தொற்று குறைந்த உடன் கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப்படும். ஆனால் இந்த அரசு தமிழ்நாடு முதல்வர் மருத்துவத்துறைக்கு அளித்துள்ள கட்டளையின்படி தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறையக் கூடாது என்பதால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அதிமுக ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எவ்வளவு தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து கொடுக்கிறார்களோ அதை எல்லாம் மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இப்பொழுதைப் பொறுத்தவரையில் கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டு தடுப்பூசிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்புட்னிக், மார்டனா போன்ற பல்வேறு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசின் சார்பில் அவை கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுக்கு அவை ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் அதனை மாவட்ட வாரியாக நாங்கள் பிரித்துக் கொடுப்போம்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.