சென்னை அடையாறில்,இன்று தனியார் அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கானஇலவச தங்கும் விடுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில்மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
ஆளுநர்வேந்தர் என்ற முறையில் விசாரணை குழுவை அமைத்துள்ளார். இந்தவழக்குசிபிசிஐடிக்குமாற்றப்பட்டுள்ளது, எனவே இந்த வழக்கை சிபிசிஐடி முழுமையாக விசாரிக்கும். சம்மந்தப்பட்ட பேராசிரியரிடம்இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியில் யாருடைய தொடர்பு எண்கள் எல்லாம் உள்ளதோஅனைவரிடமும் விசாரிக்கப்படும், அப்படி விசாரிக்கப்படும்போதுயாராக இருந்தாலும் பதில் சொல்லதான்வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி. ஏன் இவர், அவர்என்றுநான்குறிப்பிட்ட வேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அது ஆண்டவனாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் எனக்கூறினார்.