Published on 16/01/2024 | Edited on 16/01/2024

அதிமுக எம்பி தம்பிதுரை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'மத்திய அரசு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைத்திருப்பது ஒரு ஏமாற்று வேலை. இந்திய அரசியலில் தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
இந்தி மட்டும் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் தமிழ் காணாமல் போய்விடும். தமிழக ஆளுநர் எது செய்தாலும் சட்டப்பூர்வமாகச் செய்தால் நன்றாக இருக்கும். சட்டத்திற்கு புறம்பாக செய்வது நல்லதல்ல. எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி கூட பிரதமராகலாம்' என்று தெரிவித்தார்.