Skip to main content

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

salem


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (மே 27, 2020) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில், ஆறு மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் ஜூன் 23ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. 


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் 266 முதன்மைத் தேர்வாளர்கள், 266 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 1544 உதவித்தேர்வாளர்கள், 275 இதர பணியாளர்கள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றனர். 
 


சேலம் கல்வி மாவட்டத்தில் மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீசுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நோட்ரிடேம் பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.


ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்கள் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளன. 


எடப்பாடி கல்வி மாவட்டத்தில், மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், எம்.ஏ.எம். ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (மே 26) நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. கரோனா தொற்று பரவாமல் தடுக்க செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராமன் கூறியதாவது: 
 


விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் ஒவ்வொரு நாளும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குவதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி வழங்கப்பட உள்ளது.

 

salem


விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஓர் அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் (சி.இ.), ஒரு கூர்ந்தாய்வாளர் (எஸ்.ஓ.), 6 உதவித் தேர்வாளர்கள் (ஏ.இ.) என மொத்தம் 8 பேர் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு வருகைபுரியும்போது, தங்களது கைகளைச் சோப்புப் போட்டு சுத்தம் செய்வதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஊருக்குத் திரும்ப வரும் ஆசிரியர்கள், தங்களது அடையாள அட்டை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் டி.என்.இ & பாஸ் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். 


விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மதிப்பீட்டு முகாம்களுக்கு வந்து செல்ல தேவையான 23 வழித்தடங்களில் 26 அரசுப்பேருந்துகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயக்கப்பட உள்ளன.


மதிப்பீட்டு மையங்களில் பணியாற்றும் அனைவருக்கும் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp

 

இம்மையங்களில் உள்ள கழிவறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


தன்னார்வலர்கள் மூலம் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் பணியாற்றும் பணியாளர்களிடையே சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துவதை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்தார். 


முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
10th class general exam has started

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.