Skip to main content

கோவிலுக்காக கோரிக்கை வைத்த எ.வ.வேலு; செயல்படுத்துவோம் என வாக்குறுதி தந்த சேகர்பாபு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்டத்தில் துறை சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு செய்தவர் கரோனாவால் நிறுத்திவைக்கப்பட்ட தங்கத்தேரை மீண்டும் இழுத்துத் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஈசான்யத்தில் அமைக்கப்பட்ட யாத்ரிநிவாஸ்சை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கி வைத்தார்.  

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கார்த்திகை தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம், கோவில் நிர்வாகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''அண்ணாமலையார் கோவிலுக்கு யானை தேவை, கோவில் இடங்களில் உள்ள கடைகளின் வாடகையைக் குறைக்க வேண்டும், ராஜகோபுரம் முன்பு காலியாகவுள்ள இடத்தில் கடைகள் கட்டவேண்டும், முக்கிய பிரமுகர்களுக்கான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவேண்டும், புளியோதரை அல்லது கற்கண்டு கோவில் பிரசாதமாகப் பக்தர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கவேண்டும், தினமும் காலை, இரவு நேரங்களில் மாடவீதியில் பக்தி பாடல்கள் ஒளிபரப்ப வேண்டும், கோவிலுக்குள் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும், பருவதமலை வளர்ச்சியடைய துறை சார்பில் திட்டங்கள் உருவாக்க வேண்டும், இந்து சமய கலைகள் கற்கப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ஐயங்குளத்தை தூர்வார வேண்டும்'' என 10 கோரிக்கைகளை வைத்தார்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ''இங்குக் கோரிக்கை வைக்கும் முன்பே 70 விதமாகக் கோரிக்கையை முன்பே கடிதமாக அமைச்சர் வேலு தந்துள்ளார். துறை அதிகாரிகளிடம் விவாதித்துச் செய்ய முடிந்தவற்றை விரைந்து செயல்படுத்துவோம்'' என வாக்குறுதி தந்தார்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!


முன்னதாக கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகள் பௌர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரை திருவிழாவின்போது அதிகளவு செலவு செய்கிறோம், எங்களிடம் நிதியில்லை என அந்த ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பக்தர்களுக்காகத் திருவிழா உட்பட மற்ற நாட்களில் செலவிடப்படும் தொகையினை அறநிலையத்துறை 70 சதவீதம் மட்டுமே திருப்பி தருகிறது. நீண்ட கால கோரிக்கையான 100 சதவீதம் திருப்பி தரவேண்டும் எனக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை உடனே ஒப்புக்கொண்டு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், துறை செயலாளர் குமரகுருபரனும் நிறைவேற்றுகிறோம், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.