Skip to main content

கோவிலுக்காக கோரிக்கை வைத்த எ.வ.வேலு; செயல்படுத்துவோம் என வாக்குறுதி தந்த சேகர்பாபு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்டத்தில் துறை சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு செய்தவர் கரோனாவால் நிறுத்திவைக்கப்பட்ட தங்கத்தேரை மீண்டும் இழுத்துத் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஈசான்யத்தில் அமைக்கப்பட்ட யாத்ரிநிவாஸ்சை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கி வைத்தார்.  

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கார்த்திகை தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம், கோவில் நிர்வாகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''அண்ணாமலையார் கோவிலுக்கு யானை தேவை, கோவில் இடங்களில் உள்ள கடைகளின் வாடகையைக் குறைக்க வேண்டும், ராஜகோபுரம் முன்பு காலியாகவுள்ள இடத்தில் கடைகள் கட்டவேண்டும், முக்கிய பிரமுகர்களுக்கான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவேண்டும், புளியோதரை அல்லது கற்கண்டு கோவில் பிரசாதமாகப் பக்தர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கவேண்டும், தினமும் காலை, இரவு நேரங்களில் மாடவீதியில் பக்தி பாடல்கள் ஒளிபரப்ப வேண்டும், கோவிலுக்குள் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும், பருவதமலை வளர்ச்சியடைய துறை சார்பில் திட்டங்கள் உருவாக்க வேண்டும், இந்து சமய கலைகள் கற்கப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ஐயங்குளத்தை தூர்வார வேண்டும்'' என 10 கோரிக்கைகளை வைத்தார்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!

 

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ''இங்குக் கோரிக்கை வைக்கும் முன்பே 70 விதமாகக் கோரிக்கையை முன்பே கடிதமாக அமைச்சர் வேலு தந்துள்ளார். துறை அதிகாரிகளிடம் விவாதித்துச் செய்ய முடிந்தவற்றை விரைந்து செயல்படுத்துவோம்'' என வாக்குறுதி தந்தார்.

 

EV Velu who made a list for the temple ... asked the Minister!


முன்னதாக கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகள் பௌர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரை திருவிழாவின்போது அதிகளவு செலவு செய்கிறோம், எங்களிடம் நிதியில்லை என அந்த ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பக்தர்களுக்காகத் திருவிழா உட்பட மற்ற நாட்களில் செலவிடப்படும் தொகையினை அறநிலையத்துறை 70 சதவீதம் மட்டுமே திருப்பி தருகிறது. நீண்ட கால கோரிக்கையான 100 சதவீதம் திருப்பி தரவேண்டும் எனக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை உடனே ஒப்புக்கொண்டு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், துறை செயலாளர் குமரகுருபரனும் நிறைவேற்றுகிறோம், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.