Skip to main content

மறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா? ஈஸ்வரன்

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
ka

 

கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடுமலைப்பேட்டையில் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம் செய்து கொண்டிருக்கின்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்வதும், அந்த திருமணத்தை நடத்தி வைப்பதும் வரவேற்கத்தக்கது தான். கவுசல்யா ஒரு சாதாரண பெண் அல்ல. அரசுக்கு எதிரான சித்தாந்த கொள்கைகளோடு ஒன்றிப்போய் இருப்பவர். தன்னுடைய காதலை காப்பாற்றுவதற்காக பெற்ற தாய்தந்தையரையே  தூக்கில் போடுவேன் என்று சபதம் எடுத்து கொண்டிருப்பவர். தனக்கு இனி வாழ்க்கையே சங்கருடன் கொண்ட காதலுக்காகவும், இலட்சியத்திற்காகவும் வாழ்வதுதான் என்று உரக்க பேசியவர். அப்படிப்பட்ட ஒருவர் இன்னொரு மனிதருடன் கணவர் இறந்து ஓராண்டுக்குள்ளேயே காதல் வயப்பட்டு இப்போது இரண்டாவது ஆண்டில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தெய்வீக காதலை பற்றி உணர்ச்சி பூர்வமாக கவுசல்யா தொலைக்காட்சிகளில் பேசியதை கண்டு மெய்சிலிர்த்து போன இளம் பெண்கள் நிறைய பேர் உண்டு. அப்படிப்பட்ட ஒரு பெண் இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கைக்கு மன மாற்றத்துடன் தயாராகியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

 

es

 

கவுசல்யா ஆதரவற்ற பெண் என்றும், கணவனை இழந்த பெண் என்றும், மிகப்பெரிய கொடுமைக்கு உள்ளான பெண் என்றும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது வெலிங்டன் கன்டோன்மென்டில் வேலை பார்த்து வருகிறார். அரசு செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு சித்தாந்ததையும், புரட்சி என்ற பெயரில் எதிர்மறையான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரமாக பணியாற்றி வருபவர். அந்த கொள்கைகளை பிரச்சாரமும் செய்து வருகிறார். அப்படி இருப்பவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழே இராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா ?. வேறு ஒரு துறையில் அவருக்கு பணி மாறுதலை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு துறை விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

STR ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா? ஈஸ்வரன் - விமர்சனம்

Published on 14/01/2021 | Edited on 14/01/2021
eswaran STR

 

தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சி படம் பார்த்தபின்பும் தொடர்கிறதா? இயல்பான, தரமான படங்களை தந்து ஆரம்பத்தில் கவனமீர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளை கொடுத்து வருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து.

 

பழனிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பாரதிராஜாவின் மகன்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை பிரிந்து வசிக்கின்றனர். சிம்பு, பாரதிராஜாவின் பாதுகாவலராக இருக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வர குடும்பம் ஒன்று கூடுகிறது. அதே நேரம், வில்லனின் வன்மத்தாலும் ஜோதிட கணிப்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நேரக்கூடிய ஆபத்திலிருந்து குடும்பத்தை காத்து எதிரிகளை அழித்தாரா சிம்பு என்பதுதான் 'ஈஸ்வரன்' கதை.

 

ஸ்லிம், ஃப்ரெஷ் தோற்றத்தில் ஆட்டம், பாட்டு, அதிரடி... அனைத்திலும் அசத்துகிறார் 'ஆத்மன்' STR. படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு அவர்தான் என்றாலும் அந்த ஈர்ப்பு முதல் அரை மணிநேரம்தான். அடுத்து நம்மை அமர வைக்கக்கூடியது திரைக்கதைதானே?சொல்லப்போனால் படத்தில் சிம்புவுக்கு காட்சிகள் சற்றே குறைவு. அவருக்கு மற்றவர்கள் பில்ட் - அப் கொடுத்தாலும் அவர் சற்று அமைதி காத்திருப்பது ஆறுதல். அதேபோல் அவரது டைமிங் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.

 

str with bharathiraja

 

சிம்புவை காட்டிலும் இயக்குனர் பாரதிராஜாவே அதிக காட்சிகளில் தோன்றுகிறார். அவரின் நடிப்பும், கதாபாத்திரமும், அதன் பின்னணி கதையும் படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறது. அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி தன் முகபாவனைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இவரின் இளவயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் இவரது மகன் மனோஜ், இயல்பாகப் பொருந்தியிருக்கிறார், நடித்திருக்கிறார். பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. காளிவெங்கட், கவனிக்கவைக்கிறார். வில்லன் 'ஸ்டன்' சிவா, மிரட்டலான தோற்றத்தோடு சிறப்பான வில்லனாகக் கூடிய சாத்தியம் இருந்தாலும் அவரது பாத்திரம் அத்தனை அழுத்தமாக இல்லை.

 

ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை, அரதப்பழசான காட்சி அமைப்பு என பழைய டெம்ப்ளேட்டிலேயே திரைக்கதை அமைத்திருக்கும் சுசீந்திரன் படத்தை வேகமாக முடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளார் என்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் அடிப்படை பலமான கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுகள், இயல்பான நகைச்சுவை போன்றவை ரசிக்க வைக்கின்றன. கரோனா ஊரடங்கை சரியாகப் பொருத்தியிருப்பது நல்ல யோசனை.

 

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் பாடல்களும், கிராமத்துக் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. தமனின் இசை மிக வேகமாக இருக்கிறது, வேகமாக நம்மை கடந்து சென்றுவிடுகிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, அழுத்தமாக இல்லை. தமிழ் சினிமா கண்ட பல கிராமத்து படங்களின் சாயல்களுடன் உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’, குடும்பங்களுக்கு ஓகே. STRஐ எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் குறைவுதான். 


 

Next Story

"சிம்பு ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக அமையும்" - இயக்குநர் சுசீந்திரன்.

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
vdsghs

 

நடிகர் சிம்பு நடித்திருக்கும் “ஈஸ்வரன்” படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சுசீந்திரன். ஈஸ்வரன் படம் குறித்து பேசும்போது....


'ஈஸ்வரன்' படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம். அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்தபோது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல் பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது. 

 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது  எனக்கு நான்காவது படம். அவருடன் பணியாற்றும் போது எப்போதும் பிரம்மிப்பாகவே  இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்  வேகமாக ஓடிக்கொண்டே இருப்பேன். படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் என் குறிக்கோள். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன்" என்றார்.