Skip to main content

அத்தியாவாசிய பொருட்கள் தட்டுபாடு, அடாவடி விலை ஏற்றம்... கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

கரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவாசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் உத்தரவிட்டு, அத்தியாவாசிய கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியே வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதில் வீட்டுவேலைக்கு செல்பவர்கள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்லமுடியாமல் தினந்தோறும் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு திகைத்து வருகிறார்கள்.  

 

 Essential commodities scarcity, price rise ...


இதனிடையே சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,  ஊரடங்கு உத்தரவுக்குமுன் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விலையைவிட, ஊரடங்கை பயன்படுத்தி 20 சதவீதம் முதல் 50 சதமான விலையை ஏற்றி, இறக்கமற்ற வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள் என தினக்கூலி தொழிலாளர் மற்றும் சில்லரை வியாபாரிகள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
 

nakkheeran app



இதுகுறித்து சிதம்பரம் பகுதியை சார்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் கூறுகையில், குறிப்பாக ரிபைன்டு ஆயில் 1லி ரூ80 முதல் ரூ90-க்கு விற்பனை ஆனது, தற்போது 140 வரை விற்கப்படுகிறது. அதேபோல் வெல்லம் கிலோவுக்கு ரூ50 விலை ஏற்றி விற்பனை செய்கிறார்கள். இதேபோல் பூண்டு, அப்பளம், மிளகு உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் விலையை அடாவடியாக ஏற்றி விற்பனை செய்வதாக வேதனையடைகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட் இல்லை என்று டிமாண்ட் ஏற்படுத்தி, எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்கிறார்கள் என்றார்கள்.

இதனால் பல வீடுகளில் குழம்பு வைக்கமுடியாமல் ரேசன் கடையில் கொடுத்த அரிசியை வேகவைத்து கஞ்சி வைத்து ஊறுகாய், துவையல் செய்து சாப்பிடுவதாகவும் கூறுகிறார்கள். மேலும் மாத சம்பளம் வாங்குபவர்கள் பொருட்கள் கிடைத்தால் போதும் என்று எவ்வளவு விலையாக இருந்தாலும் கேள்வியே இல்லாமல் வாங்கி செல்கிறார்கள். நாங்க கடையில் நின்று பொருளின் விலையை கேட்டாலே நிற்காதீங்க போங்க சொல்ற விலைக்கு வாங்குறதா இருந்தா நில்லுங்க என்று எதையோ விரட்டுவதை போல் விரட்டுகிறார்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தட்டுபாடு இல்லாமல் அனைத்து அத்தியாவாசிய பொருட்களும் கிடைக்கவும், ஊரடங்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்து, அவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.