Skip to main content

தனியார் மெட்ரிக் பள்ளிக்கு இ.எஸ்.ஐ நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்துசெய்த உயர் நீதிமன்றம்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

ESI for Private Matriculation School High Court quashes notice sent by administration!


அரசு உதவிபெறாத தனியார் பள்ளி, செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு, இ.எஸ்.ஐ நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்றம், இந்தத் தொகையை ரத்துசெய்வது அல்லது விலக்களிப்பது குறித்து, இ.எஸ்.ஐ நிர்வாகம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயா்நீதிமன்றத்தில், பழைய பெருங்களத்தூரில் உள்ள ஜோஸ்வா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1999-ஆம் ஆண்டு எங்களது பள்ளி தொடங்கப்பட்டது. தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்படும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளி என்பதால், ஊழியா்களுக்கான இ.எஸ்.ஐ திட்டத்தில் சேரவில்லை. கடந்த 2010 -ஆம் ஆண்டு, இ.எஸ்.ஐ திட்டத்தை தனியார் பள்ளிகளுக்கும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  


இதனை எதிர்த்து,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், தனியார் கல்வி நிறுவனங்கள், இ.எஸ்.ஐ தொகையை தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தவில்லை. இந்த நிலையில், தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ), கடந்த அக்டோபரில் எங்கள் பள்ளிக்குப் பிறப்பித்துள்ள உத்தரவில், 5 ஆண்டுகளுக்கான இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை, 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தற்போது கரோனா காலம் என்பதால், பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன. கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்துள்ள தொகையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஊழியா்களுக்கான இ.எஸ்.ஐ கட்டணத்தை இனி பெற்றோர்களிடம் இருந்து கல்விக் கட்டணத்துடன் சோ்த்து வசூலிக்க முடியாது. எனவே இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..’ எனக் கோரியிருந்தது.

 

cnc


இந்த வழக்கு,  நீதிபதி ஆா்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதுள்ள கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, இ.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில், மனுதாரா் பள்ளிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. இந்த தொகையை ரத்து செய்வது அல்லது விலக்கு அளிப்பது தொடா்பாக, சட்ட ரீதியாக இ.எஸ்.ஐ நிர்வாகம், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுஎடுக்க வேண்டும். இதுதொடா்பாக மனுதாரா் ஏற்கெனவே அளித்துள்ள கோரிக்கையை, இ.எஸ்.ஐ நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.