Skip to main content

EXCLUSIVE அமமுகவில் இனியும் இருப்பது வேஸ்ட்! அ.தி.மு.க.விற்கு அணிவகுக்கும் மாஜி அமைச்சர்

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

 

2010ன் போது ஜெ. அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்தவர் நெல்லை மாவட்டத்தின் அம்பை தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கிசுப்பையா. அமைச்சரான பின்பு அவரது செயல்பாடுகளில் பிரச்சனைக்குரியதை அப்போது நக்கீரன் கட்டுரையாக வெளியிட்டதால் அவரது பதவியை ’ஜெ’ பறித்தார். குறுதிய காலத்தில் அமைச்சர் பதவியை இழந்தவர்.

 

e

 

ஜெ. மறைவிற்குப் பின்பு டி.டி.வி. அ.ம.மு.க. ஆரம்பித்த பிறகு அவரது தென் மாவட்ட விசிட்டின் போது சமூகம் சார்ந்த வகையில் தேவர் சமூகத்தவர்கள் அவர் பின்னால் திரண்டனர். இதனால் அவருக்கும் அவரது கட்சிக்கும் பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாவார் தினரகன் என்ற பிம்பம் உருவானது. இதனடிப்டையிலேயே மாஜி அமைச்சர் இசக்கிசுப்பையா அவர் பின்னால் நின்றார். கட்சிக்காக கணிசமான தன் கரன்சியை இழந்த ரிசார்ட்களின் ஒனர் இசக்கிசுப்பையா.

 

கடந்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத லெவலில் அ.ம.மு.க. வீழ்ச்சியைக் கண்டது. எதிர்பார்ப்பு காரணமாக இசக்கிசுப்பையா கட்சிக்காக தன் கரன்சியைக் கரன்சி என்று பாராமல் அம்பைத் தொகுதியில் அள்ளி விட்டார். ஜெயித்தால் தனக்கு அரசியல் அந்தஸ்தும், செல்வாக்கும் கிடைக்கும் என்பது அவரது அபார நம்பிக்கை. ஆனால் நடந்தது எதிர் மாறானது. இவரது சொந்த உழைப்பினால் அம்பை தொகுதியில் 8696 வாக்குகளை அ.ம.மு.க. பெற முடிந்தது. தோல்விக்குப் பின்பு அ.ம.மு.க.வின் மா.செ. பாப்புலர் முத்தையா, மற்றும் சொக்கலிங்கம் போன்றவர்கள் கூட்டத்தோடு அ.தி.மு.கவில் இணைந்தனர். அதே சமயம் தனது ஆதரவாளர்களோடு 04.06.2019 அன்று தனது குற்றால ரிசார்ட்டில் வைத்து ஆலோசனை செய்தார் இசக்கிசுப்பையா. காரணம் அவரது எதிர்கால நிலைப்பாடு அவருடைய பிழைப்பான காண்டராக்ட் தொழிலின் நலன் மீதிருந்தது தான்.

 

t

 

ஆனாலும் அணி மாறிய மா.செ.களின் இடத்திற்கு வி.கே.புதூர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களின் பெயரை, தென் மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜாவிடம் கொடுத்த இசக்கிசுப்பையா, அவர்களை நியமிக்கும்படி சொல்ல, மாணிக்கராஜாவோ வேறு நபர்களைச் சிபாரிசு செய்திருக்கிறார். இதை அறிந்த இசக்கிசுப்பையாவும் டி.வி.யைச் சந்தித்து தனது ஆதரவாளர்கள் பட்டியலைத் தர, அவரும், மாணிக்கராஜாவின் சிபாரிசையே ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்க, அப்செட் ஆகியிருக்கிறார் இசக்கிசுப்பையா.

 

இப்படி ஒரு மோட்டிவ் உருவான நிலையில், தான், இனியும் நீடிப்பது வேஸ்ட். தான், யார்?. என்பதை தினகரனுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்திலிருந்த இசக்கிசுப்பையா நடந்தவைகளை அசை போட்டவர் கொதிப்பின் உச்சிக்கே போய்விட்டார்.

 

இந்தச் சூழலில் அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் போது இசக்கிசுப்பையா மட்டும், இலைப் பக்கம் திரும்பாததைக் கட்சித் தலைமை கண்வைத்திருக்கிறது. அதே சமயம், தமிழக அளவில் பெரிய லெவலில் காண்ட்ராக்ட்களை செய்து வரும் பிக்க்ஷாட் இசக்கிசுப்பையாவின் காண்ட்ராக்ட் பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 50’சி’ வரையிலான பில்கள் பாஸாகாமல் முடக்கப்பட்டிருப்பது திசை மாறி அடித்த அரசியல் க்ளைமேட் என்பதை உணர்ந்த இசக்கிசுப்பையாவுக்கு இலைத்தரப்பால் கடுமையான பணமுடை. நெருக்கடிக்கும் பிரஷ்ஷருக்கும் ஆளானார் தனக்கிருக்கும் அ.தி.மு.க. நண்பர்கள் மூலமாக பேசிப் பார்த்திருக்கிறார். ஏன் அங்கிருக்க வேண்டும். இங்கே வந்து விடுங்கள் எல்லாம் நலமாகும் என சிக்னல் கிடைத்ததை யடுத்தே தொழில், பொருட்டு அ.தி.மு.க.வில் இணையும் முடிவுக்கு வந்திருக்கிறார். இசக்கிசுப்பையா.

 

r

 

இதற்காக மேற்கு மாவட்டப் பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று தனது ஆதரவாளர்களை திருப்பி வருகிறார். அணி மாறும் இந்த நிகழ்ச்சிக்கு இ.பி.எஸ்.சையும் ஒ.பி.எஸ்.சையும் வரவழைத்து தன்னுடைய மண்டபத்தில் தன்னுடைய செலவிலேயே பெரிய அளவில் வரும் 06ம் தேதியன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் இசக்கிசுப்பையா.

இங்கே கொட்டினால், அங்கே வலி எடுக்கும் என்பது தானே உலக நியதி!.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.