வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்தார்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

erode vote counting admk candidate incident

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தை, சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் உட்பட அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Erode local body election results 2020 Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe