Skip to main content

மரண குழிகள் ஸ்மார்ட் சிட்டியாம்...!  -டி சர்ட்டும், தொப்பியும்தான் மிச்சம்

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

அது என்னமோ ஸ்மார்ட் சிட்டிங்கறாங்க... ஸ்மார்ட்னா என்ன நீட்டா அழகா இருக்கனுங்கிறது தானே? இங்க எந்த தெருவும் எதுவும் ஸ்மார்ட்டா இல்லை என புலம்பிய படியே ஊர்வலத்தில் நடந்தார்கள் மாணவிகள்.

அப்படியென்ன ஊர்வலம்? செய்தி இதுதான்.,

ஈரோட்டில் நடந்து வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து மாநகர பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமை தாங்க, ஈரோடு கலெக்டர் கதிரவன் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

 

erode

 

மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் சிலரும் ஒரு கல்லூரியிலிருந்து கூட்டி வரப்பட்ட 200 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
 

ஈரோடு மாநகராட்சியில் சென்ற 2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்ட பணிகள்  தொடர்ந்து நடந்து வருகிறது.  2018 ஆம் ஆண்டு  இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகராட்சியில் ஈரோடு மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டது. திட்டங்களை அதிவிரைவாக செயல்படுத்தியதற்காக சிறந்த மாநகராட்சியாக தேசிய அளவில் ஈரோடு மாநகராட்சிக்கு விருது கிடைத்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிலைகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும், அதில் அவர்கள் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் ஆப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதை பொதுமக்கள் தங்களை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு  செய்யும் வகையில் வைத்துள்ளோம். அதில் 24 கேள்விகள் கேட்கப்படுகிறது. பொதுமக்கள் அதற்கு உரிய கருத்துக்களை  பதிலாக அளித்து வருகிறார்கள் இதுவரை 38 ஆயிரம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தியதோடு இது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தியுள்ளோம்" என்றார்.

"சார் பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகளை இன்னும் மூடவிலை, புதை வட மின்சாரத்திற்கும், குடிநீர் திட்டத்திற்கும் மண்ணை தோண்டி போட்டுட்டாங்க எல்லா தெருவிலேயும் குண்டும் குழியான இந்த மரண குழிகளில் விழுந்து எழுந்து எலும்பு உடைந்து போக வேண்டியிருக்குது. மண்புழுதியிலிருந்து தப்பிக்க கொரானா வைரஸ்க்கு போடப்படும் முக கவசம் போல் பலபேர் மாஸ்க் கட்டிக் கொண்டு தான் போறாங்க இந்த கொடுமைல இது ஸ்மாட் சிட்டியாமா? அதை வேற மக்களிடம் கொண்டு செல்ல பேரணியாம் இந்தப் பொழப்புல ஈரோடு எனது நகரம் எனது பெருமைனு டி சர்ட் கொடுத்துட்டாங்க.

ஒன்னு எங்களுக்கு மிச்சம் இந்த டி சர்ட்டும், தொப்பியும்தான் என வெளிப்படையாகவே கிண்டல் செய்தனர் மாணவ, மாணவியர்கள்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.