ரகத

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்திற்குப் புகார் வந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈரோடு எஸ்.பி சசிமோகன் உத்தரவின்படி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இப்படி பல வருடங்களாக கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் போதும் மருத்துவமனையின் தரப்பில் இருந்து இவர்கள் பணம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் தற்போது சீல் வைத்துள்ளனர்.

Advertisment