Skip to main content

கரடியால் கொல்லப்பட்ட சிறுத்தை... வனப்பகுதியில் பரபரப்பு

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

புலிகள் காப்பகமாக உள்ள சத்தியமங்கலம் மலைப் பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. யானை, காட்டெருமை, செந்நாய், மான்கள், கரடிகள் இவற்றோடு புலிகள் மற்றும் சிறுத்தைகளும் அதிகமாக வாழ்கின்றன. 


வன விலங்குகளில் புலி மற்றும் சிறுத்தைகள் மற்ற விலங்குகளுக்கு சவாலாய் இருக்கும். புலி எப்படி பாய்கிறதோ, அப்படித்தான் சிறுத்தையின் பாய்ச்சலும் இருக்கும். இவற்றை கண்டால் மற்ற விலங்குகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பயந்து ஓடும். ஆனால் என்னதான் வல்லவனாக இருந்தாலும் அதையும் முறியடிக்கும் திறன் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது ஒரு கரடி. 

  sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலையில் தமிழக எல்லையில் உள்ளது தாளவாடி வனப்பகுதி. இங்குதான் புலி மற்றும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மேலும் அவைகளின் வாழ்விடமாகவும் இந்த இடம் உள்ளது. 


இந்த நிலையில், தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் வனச்சாலையில், சிக்கள்ளி பிரிவு என்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இரிபுரம் பள்ளம் என்கிற அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டரிலேயே மலை வாசிகள் குடியிருக்கும் வனக் கிராமமும் உள்ளது. 5 ந் தேதி நள்ளிரவில் விலங்குகள் சண்டையிடும் சத்தம் கேட்டதால் 6 ந் தேதி அதிகாலை வனத் துறையினருக்கு மலை மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 

nakkheeran app



தாளவாடி பாரஸ்ட் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், அப்பகுதிக்குச் சென்று வன அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட, ஒரு சிறுத்தை வயிறு கிழிந்து இறந்து கிடந்துள்ளது. பிறகு வனத்துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுத்தைக்கு நான்கு வயது என்றும், இது வேட்டைக்காக கொல்லப்படவில்லையென்றும் தெரிய வந்திருக்கிறது. காரணம் வேட்டைக்காக கொல்லப்பட்டால் சிறுத்தையின் நகம், பல், தோல் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் எதுவும் எடுக்கப்படாமல் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இந்த காரணத்தைக் கூறிய வனத்துறையினர், இறந்த சிறுத்தையுடன் வேறு காட்டு விலங்கு ஒன்று மோதி சண்டையிட்டுள்ளது, அந்த மிருகம்தான் சிறுத்தையை கொன்றுள்ளது என்றனர். இறந்த சிறுத்தை அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டது.
 

"இரண்டு காரணம் தாங்க, இறந்தது பெண் சிறுத்தை என்பதால் மற்றொரு ஆண் சிறுத்தை உறவுக்காக சண்டை போட்டிருக்கும், அதில் பெண் சிறுத்தை சம்மதிக்காமல் சண்டையிட, ஆண் சிறுத்தை கோபத்துடன் தனது நகத்தால் பெண் சிறுத்தை உடலை கிழித்திருக்கும்... இதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கூரிய நகத்தின் தடங்கள் சிறுத்தையின் வயிற்றில் உள்ளது. அப்படிப் பார்த்தால் இது கரடியோடு மோதியது போலத்தான் இருக்கிறது. பெண் சிறுத்தை கரடியை வேட்டையாட முனைந்திருக்கும் கரடியின் பலமே அவற்றின் கால்களில் உள்ள கூரிய நகங்களும் வாயிலுள்ள பற்களும்தான்.

முடி அதிகமாக இருப்பதால் கரடியின் உடலில் காயம் ஏற்படுவதற்கு முன் அதை லாவகரமாக சுதாரித்துக் கொண்டு சிறுத்தையின் வயிற்றை கால் நகங்களால் கிழித்திருக்கும். அடிபட்டு வயிறு கிழிந்த சிறுத்தை அந்த இடத்திலுருந்து தப்பிக்க பார்த்திருக்கும் சிறுத்தையோடு சண்டையிட்ட கரடி அடுத்து யாரும் வந்து தன்னை தாக்கிவிடக் கூடாது என்பதால் அந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்கு ஓடியிருக்கும். கரடி தாக்கி வயிறு கிழிந்த சிறுத்தை அங்கேயே இறந்திருக்கும் இப்படித்தான் இருக்கும். வன விலங்குகள் சண்டையில் கரடிக்கு பலமில்லையென நினைக்கக்கூடாது. உயிர் பயத்தில் இருக்கும்போது, எதிரி எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் சண்டையில் கொல்ல முடியும் என்பதையே சிறுத்தையை கொன்று கரடி சாதித்துள்ளது" என்கிறார்கள் மலை வாசிகள்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே சிக்கள்ளி வனப்பகுதியில், பெண் புலி ஒன்று காயத்துடன் இறந்து கிடந்தது. ஆதிவாசிகள், மலைவாசிகள் அடர்ந்த இந்த வனப்பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பல குக்கிராமங்களில் அதிகம் வசிக்கிறார்கள். ஆடு, மாடு மேய்ச்சல், வனப் பொருட்கள் சேகரிப்புக்காக இந்த அலங்காட்டுக்குள் மலைவாசிகள் செல்வது அவர்களின் வாழ்வியல் முறையாக உள்ளது. முன்பெல்லாம் நடுகாட்டில் தென்படும் யானைகள், காட்டெருமைகளை வினோதமான சப்தம் எழுப்பி அவைகளை விரட்டி விட்டு திரும்பி வருவார்கள். கடந்த சில வருடங்களாக புலிகள், சிறுத்தைகளையும் காட்டுக்குள் சந்திக்கிறார்கள். இவைகளையும் இவற்றோடு மோதாமல் காட்டு மொழி எழுப்பி அவைகளை வேறு திசையில் ஓடவிட்டு பாதுகாப்பாக வருகிறார்கள். இங்கும் பலர் "புலி முருகனாக" வனப் பயிற்சி பெற்றுள்ளார்கள். ஆனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். ஆகவேதான் இது மற்றொரு புலி முருகனால் கொல்லப்பட்ட சிறுத்தை இல்லை, மோதலில் கரடியால் கொல்லப்பட்டது என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.