Skip to main content

ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் ஈரோடு வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

 "அவருக்கு ஐம்பது போலீஸ் போதாதா?" அப்புறம் எதுக்குங்க ஆயிரம் போலீஸ் இங்க நிக்கறாங்க.  அப்படி யார் தாங்க வர்றாங்க? இப்படித்தான் ஈரோடு ரயில் நிலைய வளாகம் முழுக்க நிரம்பியிருந்த போலீசாரைப் பார்த்து அப்பாவி மக்கள் கேள்வி எழுப்பினார்கள். கடைசி வரை போலீசார் வருவது யார் என்று கூறவே இல்லை. 

 

m

 

"ஒரு நபருக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்றால் அனேகமாக அந்த நபர்......" இப்படி பலர் பேசத் தொடங்கினார்கள்.   காலை 11.30 க்கு வந்த இன்டர்சிட்டி ரயிலில் வந்த அந்த வி.ஐ.பி.யை மூன்றடுக்கு பாதுகாப்புடன் புல்லட் புரூப் காரில் போலீசார் பத்திரமாக எங்கோ அழைத்துச் சென்றனர். அந்த வி.ஜ.பி.யை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பதே உண்மை. 

 

அவர் தான் பிரதமர் மோடிக்கே உத்தரவடும் இடத்தில் உள்ளவர். இந்தியாவின் மற்றொரு அதிகார மையத்தின் தலைமையகமாக இருக்கும் நாக்பூர் முகாமின் தலைவர்.  இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சின் தலைவர் மோகன் பகவத்....!

 

ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  ஆர்.எஸ்.எஸ் சார்பில் மண்டல முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாம் இன்று மாலை தொடங்கி வரும் 9-ந் தேதி வரை  4 நாட்கள் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் பங்கேற்கத் தான்  ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று  ஈரோடு வந்தார்.  மோகன் பகவத்க்கு பிரதமர், ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும்  இசட் பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .  இதனால் 24 மணி நேரமும்  துப்பாக்கி ஏந்திய போலீசார்  அவருக்கு பாதுகாப்பாக உள்ளனர்.

 

ஈரோடு நகர்  பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து காளைமாடு சிலை ,தீயணைப்பு நிலையம், காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பார்க்  பிரப்ரோடு ,பெருந்துறை ரோடு ,கலெக்டர் அலுவலக பகுதி,  செங்கோடம்  பள்ளம்  வரை 700 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

 

பயிற்சி முகாம் நடைபெறும் பள்ளியைச் சுற்றிலும் 300 போலீசாரை கொண்ட டீம்  3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மோகன் பகவத் ஈரோடு வருகை  ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் தான் என்றாலும் பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் அரசியல் ரீதியாகவும் ஆர்.எஸ்.எஸ் -ன் நிலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா சுயநலம் கொண்ட நாடு அல்ல” - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rss leader mohan bhagwat said India is not a selfish country

 

“உலகத்திற்கு ஒரு புதிய பாதையை இந்தியாதான் காண்பிக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  

 

பஞ்சாப் மாநிலத்தில், நாம்தாரி சர்வதேச தலைமையகம் பைனி சாஹிப்பில், சத்குரு பர்தாப் சிங் மற்றும் மாதா பூபிந்தர் கவுர் ஆகியோரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய அவர், “உலகில் சமநிலையை உருவாக்குவதே இந்தியாவின் வேலை.  இந்தியா அதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு அல்ல; அது அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறது” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சக்திகள் நாட்டை மட்டுமல்லாமல், உலகத்தையும் சேர்த்துச் சேதப்படுத்துகின்றன. மேலும், உலகத்திற்கே ஒரு புதிய பாதையை இந்தியா தான் காண்பிக்க வேண்டும். அதேசமயம் அதன் பாரம்பரியங்கள், கலாச்சாரம், பாரம்பரியத்தை விடாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே, மதத்தின் பொருள் என்பது ஒன்றுபடுவதே தவிர, அது சிதைவதைப் பற்றிப் பேசவில்லை" எனப் பேசினார். 

 

 

Next Story

“பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடரவேண்டும்” -  ஆர்.எஸ்.எஸ் தலைவர் 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Reservation should continue as long as there is discrimination says mohan bhagwat

 

“பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

 

நாக்பூரில் நேற்று(6.9.2023) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சி அடைந்து வந்தாலும், நாம் மட்டும் அந்த வீழ்ச்சியில் இருந்து தப்பித்து இருக்கிறோம். நமது பாரதத்தின் அடித்தளம் உண்மை என்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. நமது கலாச்சார வேர்களைப் பிடுங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கலாச்சாரத்தின் வேர்கள் உண்மை என்பதால் பாரதம் பாதுகாக்கப்படுகிறது.

 

சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சம உரிமையை வழங்கும் வரை இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் கொடுக்க வேண்டும். பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடரவேண்டும். இதற்கு ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவளிக்கும்.” என்றார்.