Skip to main content

பிரபல ரவுடி 'நீராவி முருகனை' சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்!

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

தூத்துக்குடி நீராவி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.


கடந்த, 2018- ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியில் உள்ள விவசாயி சக்திவேல் என்பவரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக நீராவி முருகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகனை தேடி வந்தனர். 

erode rowdy round up police arrested



இந்த நிலையில் நீராவி முருகன் தூத்துக்குடி அருகே உள்ள வள்ளியூர் பகுதிக்கு அடிக்கடி சென்று வருவதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் மாறு வேடத்தில் வள்ளியூர் பகுதியை கண்காணித்து வந்தனர். 


அந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் (20.12.2019) இரவு அந்தப் பகுதிக்கு நீராவி முருகன் தனது கூட்டத்தோடு வந்துள்ளார். இதை அறிந்த தனிப்படை போலீசார் நீராவி முருகன் வந்த வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். போலீசார் தங்களை சுற்றி வளைத்ததைத் தெரிந்துக் கொண்ட நீராவி முருகன் கூட்டம் வாகனத்தை போலீஸார் மீது ஏற்ற வேகமாக வந்துள்ளனர். 


இதனையடுத்து டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் குழு நீராவி முருகன் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் யாருக்கும் காயம் இல்லை. அந்த நேரத்தில் நீராவி முருகன் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளது காவல்துறை. பிறகு அவர்களை நேற்று (21.12.2019) ஈரோடு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நீராவி முருகன் மீது ஈரோடு, திருப்பூர் ,சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.