Skip to main content

ரேசன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கும் நிவாரன பொருட்கள் வழங்க கோரிக்கை

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

அரசு கொடுக்கும் நிவாரண உதவிகள் உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அரசின் அறிவிப்பு முழுமையாக மக்களை சென்றடையும் என கூறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில துணை தலைவர் பெருந்துறை சின்னச்சாமி.

அவர் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொடுத்த விண்னப்பத்தில், "மாண்பமை கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ரிட் பெட்டிஷன்  No:7423 of 2020 என்ற வழக்கில் நேற்று 3-4-2020 வழங்கிய தீர்ப்பின் நிலையை இத்துடன் இணைத்துள்ளோம். அத்தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டபடி, குடும்ப அட்டைகள் அதாவது ரேசன் கார்டு  இல்லாத கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், புலம்பெயர்ந்த குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் 15கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அவர்களுக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
 

நமது ஈரோடு மாவட்டத்தில் மேற்கண்ட தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். வட மாநிலத்திலிருந்து கட்டுமான பணி மற்றும் நூற்பாலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்களில் குடும்பம் குடும்பமாக பணிபுரிந்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பத்தாயித்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

 

chinnasamy



அவர்களுக்கு ரேசன் கார்டு உள்ளிட்ட இருப்பிட சான்று எதுவும் இல்லை. இப்போது அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டது. வேலை இழப்பால் வருமானம் இன்றி உயிர் வாழ தேவையான உணவுக்கே வழி இல்லாத பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது.
 

ஆகவே, அவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்   ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் தமிழகம் முழுக்க உள்ள ரேசன் கார்டு அல்லது அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் இந்த கரோனா நிவாரண பொருட்கள் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.