Skip to main content

எத்தனை நாளைக்கு அரசாங்கம் இப்படிக் கொடுமை செய்யும்..! போராட்டத்தில் மக்கள்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

erode - Public Request



கொடுமையடா... கொடுமையடா... இந்தக் கொடுமையைக் கேளுங்கைய்யா... என ஈரோடு வீதியில் இறங்கித் தவித்த அந்த மக்கள், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீர் குடித்து உயிர் வாழ்வதாகக் கூறி பென்கள் தலையில் அடித்துக் கொண்டார். 
 

ஈரோடு நகரில் பல இடங்களில் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாநகரில் தொடர்ந்து மக்கள் நடத்தும் இந்தத் திடீர் போராட்டத்தினால் அரசு அதிகாரிகள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.
 

வீரப்பன் சத்திரம் மிட்டாய்காரர் தெருவில் 400- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டடத் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால் சென்ற 40 நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதித்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 
 

இதில் அப்பகுதியில் ரேசன் கார்டு உள்ள 50- க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் அரசின் நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளது. ஆனால், மீதமுள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்திற்கு அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடைக்கவில்லை. இதைவிட கொடுமை ரேசன் கடைகள் மூலம் கொடுத்த அரிசியும் தரமற்றதாக இருப்பதால் உணவுக்கு அதைப் பயன்படுத்த முடியவில்லை என மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இந்நிலையில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தெருவின் மையப்பகுதியில் நின்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், நாங்கள் கூலி வேலைக்குச் செல்லும் கட்டடத் தொழிலாளர்கள். கரோனா ஊரடங்கு உத்தரவால் 40 நாளுக்கு மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவியாய்த் தவித்து வருகிறோம். 
 

நாங்கள் பசி பட்டினியோடு, தண்ணீரைக் குடித்து உயிர் வாழ்கிறோம். சத்தியமாக இது உண்மை. அம்மா உணவகத்திற்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள். குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். வீட்டில் உள்ள நடக்க முடியாத முதியவர்களை அழைத்துக்கொண்டு போய் அம்மா உணவகத்தில் சாப்பிட முடியவில்லை. அங்குச் சென்றாலும் மைல் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. 
 

ரேசன் கடைகளில், ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையும், உணவுப் பொருட்களும் வழங்கினர். ஆனால், ரேசன் கார்டு இல்லாத எங்களைப் போல நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் எவ்வித உதவித் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
 

அங்கு வந்த ஈரோடு தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரேசன் கார்டு இல்லாதவர்கள் அனைவரும் உங்கள் பெயர், முகவரி, ஆதார் கார்டு எண் போன்றவற்றை எழுதி கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள். உடனடி ஆய்வு நடத்தி, உங்கள் பகுதிக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
 

அதுவரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் வழங்கப்படும் உணவுகளைப் போய்ச் சாப்பிடுங்கள். ரேசன் கடையில் மே மாதத்திற்கான பொருட்கள் கொடுக்கும் போது அனைத்தும் தரமானதாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். வேறு வழியில்லாமல் மக்கள் கலைந்து சென்றனர்.
 

http://onelink.to/nknapp

 

இதேபோல் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள  மக்கள் 300- க்கும் மேற்பட்டோர் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் நிவாரணப் பொருட்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அம்மா உணவகத்திலும் அனைவருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. மறு சாப்பாடு கேட்டால் போட மறுக்கின்றனர். 
 

 

அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றாலும் போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எனக் கூறி வெளியே விட மறுக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். கரோனா, கரோனா எனப் பயமுறுத்தியே இன்னும் எத்தனை நாளுக்கு அரசாங்கம் இப்படிக் கொடுமை செய்யும்? என வேதனையுடன் கூறினார்கள்.
 

அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல்... அடக்க அடக்க மக்களின் கோபம் அடங்க மறுக்கும் என்பதே உண்மை.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.