Skip to main content

ஓடு... ஓடு... துரத்து... துரத்து... ஐயோ... போலீசுக்கு தண்ணிக்காட்டி எஸ்கேப்பான திருடன்!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

ஈரோடு போலீசாரை ஓடு.. ஓடு என ஓட வைத்து இறுதியில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பியோடி விட்டான் ஒரு கொள்ளையன். சினிமாவில் வருவதுபோல் அந்த  சேஸிங் நடந்துள்ளது என்பது தான் சுவாரஸ்யம்....
 

sp erode

 

 

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, பெண்களை குறிவைத்து தாலி கொடி செயின் அறுப்பு என க்ரைம் ரேட் எகிற இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் சக்திகணேசன்  உத்தரவின் பேரில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு போலீசாருக்கு நேற்று இரவு வாக்கி டாக்கி மூலம் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஊட்டியில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணை கொண்ட லாரி திருடப்பட்டு, அதனை கொள்ளையன் ஒருவன் ஓட்டி வருவதாகத்தான் அந்த தகவல்.

எனவே, மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.  இந்நிலையில் அந்த குறிப்பிட்ட லாரி அம்மாபேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளது. லாரியை ஓட்டி வந்தவர் மிகவும் தாராளமாக ரூ.15 ஆயிரத்துக்கு டீசல் அடி என கூற, பெட்ரோல் பங்க் ஊழியர் ஆச்சரியத்தோடு 15 ஆயிரத்துக்கு  டீசல் அடித்திருக்கிறார். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, பில் தருவதாக கூறிய திருடன் திடீரென லாரியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த  பங்க் மேலாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்மாபேட்டை போலீஸார் அந்த லாரியை பிடிக்க ஜீப்பில் துரத்தினர். ஆனால் அதற்குள் அந்த லாரி பவானியை தாண்டியது. பவானி போலீசார் இரண்டு இரு சக்கர வாகனத்தில் துரத்த அடுத்து அந்த லாரி ஈரோடு நோக்கி சென்று விட்டது. உடனே ஈரோடு போலீசாருக்கு தகவல் செல்ல  அந்த திருட்டு லாரி சர்வீஸ் ரோடு வழியாக ஈரோடு வ. உ .சி .பூங்கா  வழியாக வந்து கொண்டிருந்தது.  இதையடுத்து ஈரோடு டவுன் போலீஸார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசை  பார்த்ததும் அந்த நபர் லாரியை வலது புறம் திருப்பிக் கொண்டு வேகமாக சென்றார்.

மீண்டும் போலீசார் ஜீப் மற்றும் டூவீலர்களில் விரட்டோ விரட்டு என விரட்டிச் சென்றனர். ஆனாலும் சளைக்காத திருடன் அந்த லாரியை வேகமெடுத்துச் சென்றான். ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானா அருகில் லாரி வரும்போது அங்கு உஷராக  இருந்த போலீசார் பேரிங் போர்டு போட்டு வைத்து சாலையை வழிமறித்தனர். இதனால் லாரியை ஓட்டி வந்த திருடன் இதற்கு மேல் போலீசை விரட்டி பயனில்லை என முடிவு செய்து லாரியை டக்கென அங்கு நிறுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.

வேர்க்க விறு விறுக்க அங்கு வந்த போலீசார் நின்ற லாரியைதான் மீட்டனர். போலீசை சுமார் 50 கிலோ மீட்டர் ஓட வைத்து தன்னிகாட்டி விட்டு எளிமையாக தப்பிய திருடனை இனி தேடித்தான் பிடிக்க வேண்டும். பிறகு இதுகுறித்து ஈரோடு போலீசார் ஊட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈரோடு வந்து லாரியை மீட்டு சென்றார்.

எப்படியோ சினிமா காட்சி போல திருட்டு லாரியை விரட்டி மடக்கி பிடித்த சம்பவம் பெரும் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரியை பிடிக்க உறுதுணையாய் இருந்த, அதாவது லாரி திருடனால் துரத்தி வேர்க்க வைத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டி வாழ்த்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.