Skip to main content

உழைப்பாளிகள் முதல் சூதாடிகள் வரை..! தற்கொலைகள் அதிகமான நமது நாடு..!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

eeee

 

கரோனா காலம் என்பது அன்றாடம் உழைத்து, அதில் வரும் வருமானத்தை வைத்து சமைத்து உண்டு வாழும் ஏழைகள் முதல் நவீன சூதாட்டமான ஆன்லைன் வர்த்த தொழில் புரிவோர் வரை எல்லோரையும் விட்டு வைக்காமல் தனது கொடுங்கரத்தால் பொருளாதார நஷ்டம், பின்னடைவை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை சூறையாடி வருகிறது.

 

ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்தவர் 40 வயதான நரசிம்மன், இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. நரசிம்மன் நடத்தி வந்த தொழில், ஆன்லைன் வர்த்தகம். ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தக ட்ரேடிங் அலுவலகத்தை நீண்ட நாட்களாக நடத்தி வந்தார். 

 

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அமல்படுத்திய ஊரடங்கால் இவரது தொழிலும் சிதைந்தது. சென்ற சில மாதங்களாக நரசிம்மனுக்கு பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன், தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், தனக்கு ஏற்பட்ட பல லட்ச ரூபாய் கடனையும் அடைக்க முடியாது இருந்துள்ளார். வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

 

இதைப்பார்த்து பயந்து துடித்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சம்பந்தமாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Ad

 

எல்லா தொழிலும் சிதைவு ஏற்பட்டு இறுதி சுவாசத்தை நிறுத்தி வருகிறது. இந்த 2020-இல் உழைப்பாளி முதல் சூதாடி வரை தற்கொலைகள் சராசரி இரண்டு மடங்கு கூடியுள்ளது. இந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் எதற்கும் அசராமல் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.