இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இன்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ் .தென்னரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய், 25 லட்சம் வழங்கியுள்ளார். இந்த தொகைக்கான காசோலையை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் கதிரவனிடம் இன்று எம்.எல்.ஏ. தென்னரசு வழங்கினார்.
எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியை கொடுத்திருந்தால் அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் கொடுத்திருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதி என்பது மக்கள் வருவாயிலிருந்து அரசுக்கு வரும் பணம். மக்கள் பணத்தை அரசு கொடுக்க, அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை மீண்டும் அரசுக்கு கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ. தென்னரசு சுற்றி வளைத்தாலும் இது மக்கள் பணம் தாங்க...என நகைச்சுவையாக கூறுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க.வினர்.