Skip to main content

மண் சரிவில் சிக்கி பலியான தொழிலாளி... ஈரோட்டில் பரிதாபம்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

Landslide- erode - worker

 

பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்ப் பதிக்கும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவினால் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.


ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நLந்துவருகிறது. இன்று மாலை ஈரோடு பழைய கரூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 15 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழாய்ப் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

 

அந்தக் குழிக்குள் இருந்த சிலர்  தப்பி ஓடிய நிலையில் அதில் ஒருவர் மட்டும் மண்சரிவில் சிக்கி கொண்டார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர் அங்கு வந்து ஜே.சி.பி. இயந்திர உதவியுடன் மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கு மேல்  போராடியும் இறந்த நிலையில் தான் அந்தத் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும், பரிதாபத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

 

இப்படி ஆபத்தான வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும் அவரின் குடும்பத்திற்கு தேவையான நிவாரனமும் கிடைக்கவேண்டும் என சக தொழிலாளர்கள் கண்ணீருடன் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.