Skip to main content

ஈரோடு: சுயேச்சை சின்னம் ..! தி.மு.க.வினர் அதிருப்தி,, அ.தி.மு.க.வினர் குஷி...!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திமுக கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இந்த நிலையில் மதிமுகவுக்கு ஏற்கனவே பம்பரம் சின்னம் இல்லை என்று நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என ஈரோடு மாவட்ட திமுகவினர் மற்றும் மதிமுகவினரும் அவரவர்கள் கட்சித் தலைமைக்கு இக்கருத்தை கொண்டு சென்றனர். 
 
 
 
election

 

 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பாளராக போட்டியிடுகிற கணேசமூர்த்தியும்  உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம் என முடிவு செய்தனர் ஆனால் அக்கட்சியின் அவை தலைவரான திருப்பூர் துரைசாமி தொடக்கம் முதலே தி.மு.க. சின்னத்தில் நாம் நிற்கக் கூடாது அப்படி என்றால் மதிமுக தனிக்கட்சியாக எப்படி நடத்த முடியும்? என தொடர்ந்து எதிர்ப்பு நிலையை எடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில் திருப்பூர் துரைசாமி கருத்தை மறுக்க முடியாமல் சரி சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற முடிவிற்கு மதிமுக தலைமையும் வேட்பாளரான கணேசமூர்த்தியும்  முடிவு செய்துள்ளார்கள்.
 
 
 
இது நமது வெற்றியை பாதிக்கக்கூடிய ஒரு முடிவு என்று வெளிப்படையாகவே தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில் என்றால் வெற்றி உறுதி என்பதை இப்போதே உறுதிப்படுத்துவோம் ஆனால் சுயேட்சை சின்னம் என்றால் அவ்வளவு சுலபம் கிடையாது. மேலும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள சின்னம் உதயசூரியன். அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் மத்தியில் பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராகவும்  மக்கள் மனநிலை உள்ளது. இதை வாக்குகளாக கொண்டுவர வேண்டுமென்றால் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க. அணிக்கு வரும் பட்சத்தில் அங்கு சின்னம் முக்கியமானதாக இருக்கும். அரசியல் கட்சிகளில் மிகுந்த அறிமுகமாக உள்ள சின்னம் உதயசூரியன். ஆனால் புதிதாக ஒரு சுயேச்சை சின்னம்  வாங்கி இதுதான் எங்களின் சின்னம் என்று மக்களிடம் கொண்டுபோய் அவர்களிடம் பதிய வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவார்கள். இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு ஓட்டுகள் ஒரே அணிக்கு வரவேண்டும் என்றால் சின்னம் தான் முக்கியம். உதயசூரியன் தான் அவர் போட்டியிடுகிற சின்னமாக இருக்க வேண்டும். என தொடர்ந்து தி.மு.க.வினரும் கூட்டணிக் கட்சியினரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஏற்றுக் கொள்ளவில்லையாம். 
 
 
 
 
இதனால் ஈரோடு தொகுதி தி.மு.க. கூட்டணியினர் மிகுந்த சோர்வாகவும் அதிருப்தியிலும் உள்ளார்கள். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. சுயேச்சை சின்னம் என்பதை தெரிந்துகொண்ட எதிரணியான அதிமுகவினர் இப்போதே வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஷி யுடன் அவர்கள் பரபரப்பாக பேசுகிறார்கள். தி.மு.க. தலைமை இந்த சின்னம் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
 
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.