Skip to main content

ஹெல்மெட் கொள்ளையர்களின் குறியில் தாலிக்கொடிகள்....

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

பெண்களின் கழுத்தில் உள்ள தாலிக்கொடிடைபிடிங்கிச் செல்லும் ஹெல்மெட் கொள்ளையர் கூட்டம் ஈரோட்டில் அதிகமாகி விட்டது. கடந்த மூன்று மாதமாக செயின் அறுப்பு கொள்ளை என்பது கோபி, மொடக்குறிச்சி, பவானி, சத்தியமங்கலம் என பட்டியல் நீள்கிறது.

erode incident


நேற்று ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி பேராசிரியர்   மனைவியின் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை ஹெல்மெட் கொள்ளையர்கள் அறுத்துள்ளார்கள். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .இவரது மனைவி  சுகந்தி. கணவன் -மனைவி இருவரும்  தீபாவளி விடுமுறைக்கு  சொந்த ஊரானா சென்னிமலைக்கு  வந்திருந்தனர். இன்று காலை பொருட்கள் வாங்க  சென்னிமலையில் இருந்து  மோட்டாடார் சைக்கிளில் ஈரோடுக்கு வந்து கொண்டிருந்ததனர். வண்டியை கணவர் வடிவேல் ஒட்டினார்.

மனைவி சுகந்தி பின் சீட்டில் அமர்ந்து வந்தார். சென்னிமலை ரோட்டில் அவர்கள் முத்தம்பாளையம் பிரிவு ரோடு அருகில் சென்ற போது  அவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு நபர்கள் வடிவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதுவது போல் வந்தனர். இதனால் நிலை தடுமாறினார் வடிவேல்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் கழுத்தில் கை வைத்து தாலிக்கொடியை இழுத்தனர். 5 பவுன் தாலியான தங்க செயினை பறித்து அவர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். 


செயின் அறுத்த போது சுகந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது  இச்சம்பவம் அறிந்து  அப்பகுதி மக்கள் திரண்டு திருடர்களை பிடிக்க முயன்றனர், ஆனால் அந்த  மர்ம நபர்கள் வளைந்து, நெளிந்து வேகமெடுத்து மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர். இதனையடுத்து தாலுகா போலீசில் வடிவேலும் சுகந்தியும் புகார்  தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இது போல் ஹெல்மெட் கொள்ளையர்கள் தொடர்ச்சியாக வண்டிகளில் பயணித்துக் கொண்டே கைவரிசை காட்டி வருவதால் மக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் தாலியை காப்பாற்ற அச்சத்துடன் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.