erode gobichettipalayam old man stomach pain incident

வயிற்று வலியால் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த உடையகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்டமூப்பன் (வயது 76). இவர் தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி மாலை வயிற்று வலி காரணமாக பாட்ட மூப்பன் தனது வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Advertisment

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.