Skip to main content

சாப்பிடும் அரிசிக்கு வரி போட்ட மோடி ... - ஈரோடு கணேசமூர்த்தி  ஆவேசம்

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 


ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ம.தி.மு.க. கணேசமூர்த்தி இன்று கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட  வ.உ.சி நகர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம் காலனி, பள்ளக்காட்டூர், வேலாயுதம்பாளையம்,  சின்னியம்பாளையம்,  கருத்திபாளையம், வள்ளிபுரம், கருக்கம்பாளையம் காலனி, கைகாட்டி, நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

 

e

 

அப்போது அவர் மக்களிடம் பேசுகையில்,  ‘’நடைபெறுகிற இந்த தேர்தல் என்பது இந்தியாவின் ஒற்றுமையை குலைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மோடி ஆட்சியை  அகற்றுவதற்கு தான். அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்வதற்காகவும்  இந்த தேர்தல் நடக்கிறது. ஜி.எஸ்.டி., வரியால் சிறு குறு வியாபாரிகள், ஜவுளி, நெசவு  வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

e

 

நான் காங்கயம் பகுதியில் பிரச்சாரம் செய்த போது, அரிசி வியாபாரிகள் என்னிடம் பேசினார்கள்.  அதாவது, அரிசி ஆலைகளில் தயாரிக்கப்படும் அரிசியில், பிராண்ட் அரிசி வாங்கி சாப்பிட்டால் வரி செலுத்த வேண்டி உள்ளது.  சாப்பாட்டுக்கு கூட வரி செலுத்த சொல்லும் மோடி அரசை நாம் அகற்ற வேண்டும்.

 

e

 

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் வங்கியில் நகைக்கடன் ரத்து செய்யப்படும், பட்டதாரிகள் கல்விக்கடன், விவசாய கடன் ரத்து செய்யப்படும், ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் பணி, 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணி வழங்கப்பட உள்ளது. வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள்’’ என கூறினார்.

 

e

 

விவசாயி விளைவித்து மக்களுக்கு கொடுக்கும் உணவான அரிசிக்கு கூட மோடி அரசு ஜி.எஸ்.டி. வரி போட்டு அந்த வரிப் பணத்தை மத்திய அரசு சுரண்டி எடுக்கிறது என்கிற தகவலை வேட்பாளர் கணேசமூர்த்தி கூறியது, பொது மக்களிடம் மோடி எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.