Skip to main content

பணம் பறிக்கும் பறக்கும் படையும்... களை இழந்த மாட்டுச் சந்தையும் ...

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

பாராளுமன்ற தேர்தலையொட்டி  வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் பணம் பட்டுவாடா நடக்கிறதா என்பதை  கண்காணிக்க  பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

க்


ஈரோடு மாவட்டதில் இந்த பறக்கும் படையினர்  வியாபாரிகளாகப் பார்த்து தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோட்டில்  ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் புகழ் பெற்ற மாட்டுச் சந்தை ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெறுவது வழக்கம். இதற்காகவே  வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வருவார்கள்.  தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வியாபாரிகள் சந்தைக்கு வர பயப்படுகிறார்கள்.  

 

முன்பெல்லாம்  ஒரு வியாபாரி பத்து மாடுகளை வாங்கிச் செல்வார். ஆனால் தற்போது பணம் பறிக்கும் பறக்கும் படையால் பணம் கொண்டு வர முடியாமல் மிகவும் கவனமாக ஏதோ திருட்டுதனம் போல் சில ஆயிரங்கள் மட்டும் கொண்டு வருகிறார்கள்.  இதனால் இருக்கும் சொற்ப தொகைக்கு ஒன்றிரண்டு மாடுகள் மட்டுமே வாங்கி செல்கிறார்கள்.  இன்று கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினார்கள். 


இன்று வழக்கம் போல் மாட்டுச் சந்தை கூடியது.  ஆனால் மாடுகள் வரத்து குறைவாக வந்திருந்தது.  கேரளா கர்நாடகா தெலுங்கானா கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ரூ .5 லட்சத்திற்கு மாடுகளை வாங்கிச் செல்லும் அந்த  வியாபாரிகள் ரூ. 40 ஆயிரத்துக்கும் மட்டும் மாடுகளை வாங்கிச் சென்றனர்.


பொதுவாக 90 முதல் 95 சதவீதம் மாடு விற்பனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று 20 சதவீதம் மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது. 


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிக்காரர்களை கவனிப்பதை விட்டு விட்டு மாட்டு வியாபாரியையும் மளிகை கடைக்காரனையுமே கண்கானிக்கறாங்க எல்லாம் சரிங்க ஐம்பதாயிரத்திற்கு மேலே இருந்தா உரிய ஆவனத்தை காட்டுனு சொல்றாங்களே மாடு என்ன விலைக்கு போகும்னு மாட்டுக்கா தெரியும் விலை பேசி விற்ற பிறகு தான் இன்ன விலை என்பது தெரியும் ஆவனம். ஆவனம் கறாங்க அப்படினா என்னனு விளக்குங்க சாமிகளா? என வியாபாரிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.