Skip to main content

ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்குக் கருப்புக்கொடி... -விவசாய சங்கம் அறிவிப்பு!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

Agricultural Association

 

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

 

மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 17 ஆம் தேதி ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கருப்புக் கொடி காட்டி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 

இதுசம்பந்தமாக அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு கூறும்போது, "தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் வைப்புத்தொகையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை முடக்க அரசு முயற்சிப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.  

 

கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு, 'ஆடிபட்டம் தேடி விதை' என்பதைப் போல பயிர்  சாகுபடிக்கான  நேரம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஏற்கனவே கரோனோ ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

பயிர் சாகுபடிக்கு உரம், பூச்சிக்கொல்லி, விவசாய இடுபொருட்களை வாங்க முடியாமல், விவசாயிகள் அடுத்தடுத்த சாகுபடியைத் தொடங்க முடியாத அவல நிலை ஏற்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17 ஆம் தேதி ஈரோடு வரும் போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டி கன்டன போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

 

http://onelink.to/nknapp

 

அதே நாளில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளையே நம்பி உள்ள நிலையில், கரோனோ காலத்தில், அரசின் இந்த முடிவு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' நடவடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் ஈரோடு வருவதற்கு முன்பாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.