erode east by election admk candidate pray for virudhachalam viruthagirishwarar temple 

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க வேட்பாளர்தென்னரசு நேற்று (26.02.2023) சிறப்பு வழிபாடு செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன்,அ.தி.மு.க சார்பில் தென்னரசு மற்றும் சுயேட்சைகள் பலர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்னதாகஅ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு தேர்தலில் வெற்றி பெற வேண்டி காசிக்கு செல்வதாகக் கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார்'காசியை விட வீசும் அதிகம் விருத்தகாசி' ஆகையால், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருமாறுகூறியுள்ளார். அதையடுத்து நேற்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த தென்னரசு தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார்.