Skip to main content

ரகசிய கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

எம்.எல்.ஏ., அமைச்சர், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் என பலர் மீதும் பல குற்ற வழக்குகள் முந்தைய காலங்களில் இருந்த துண்டு. அதிகாரத்திற்கு வந்து விட்ட பிறகு வழக்குகள் நிறைவு பெற்று பலர் மக்கள் தலைவர்களாக உள்ளார்கள். ஒரு சிலர் மீது இப்போதும் வழக்குகள் இருக்கத்தான் செய்கிறது.
 

சரி இவர்களின் கதை ஒரு புறம் இருக்கட்டும்... இப்போது கண்கானிக்கப்படுபவர்கள் க்ரைம் சம்பவங்களில் முன்பு ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகள் தான்.

 

police



ஈரோடு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை, கொள்ளை  வழக்குகளில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள். அதில் தண்டனை காலம் முடிந்தோ அல்லது அவர்கள்  ஜாமினில் வெளியே வந்தவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களை தனிப்பிரிவு மற்றும் கிரைம் போலீசார் மூலம் பட்டியலிட்டு அதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார்  கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  
 

இவர்களது நடவடிக்கைகளை போலீசார் மிகவும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.    இவர்களில் யாரால் மீண்டும் பிரச்சனை வரும் அல்லது பிரச்சினை வரக்கூடும் என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் ரகசியமாக விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
 

 இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் பழைய  குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தீவி்ரமாக கண்காணித்து வருகிறோம்.  ஈரோடு மாவட்டத்தில் 920 பழைய குற்றவாளிகள் உள்ளனர்.  அவர்கள் பற்றிய பட்டியல் வைத்துள்ளோம். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 


 

 அவர்கள் பெயர் முகவரி தற்போது அவர்கள்  என்ன செய்து வருகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் ? போன்ற விவரங்களை தயார் செய்து அதனை கணினியில் பதிவு செய்து உள்ளோம். இந்த கண்காணிப்பு தொடரும் என்றார். 
 

"இதே போல் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் போலீசார் ரகசியமாக கண்கானித்து அவர்கள் பெறும் லஞ்சத்தை, ஊழலை மக்களிடம் வெளியிட்டால் அது சிறப்பான, தரமான சம்பவமாக இருக்குங்க சார்" என நையாண்டி யாக அதே சமயம் சீரீசாகவும் பேசினார் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.