Skip to main content

"ஒரே நாளில் நிரம்பும் அணை..." -மொத்த நீரும் வீணாகக் கடலில் கலக்கும்..! 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

  bhavanisagar  Dam -

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை தான் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. மேலும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

 

தற்போது சென்ற மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள சிற்றோடைகள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

 

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சென்ற நான்கு நாட்களில் மளமளவென உயர்ந்து இன்று மாலை 3 மணி நேர நிலவரப்படி அனையின் நீர்மட்டம் 96.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 39,617 கன அடியாக அதிகரித்துள்ளது. 

 

இந்த அணையிலிருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீர் என மொத்தம் 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நாளை 8 ஆம் தேதி இரவுக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்றும் முழுகொள்ள வான 105 அடி 9 ஆம் தேதி நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை கரையோரங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

http://onelink.to/nknapp

 

இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள ஐயப்பன் கோவில் படித்துறை, விநாயகர் கோவில் படித்துறை கோட்டு வீரம் பாளையம், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் பவானி ஆற்றில் இறங்கி குளிக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 

பவானிசாகர் அணை நிரம்பினால் அனைக்கு வரும் முழு நீரும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படும் இது பவானி கூடுதுறையில் உள்ள காவேரி ஆற்றில் கலக்கும் இதனால் காவேரி கரையோரங்கள் வெள்ள அபாயம் ஏற்படுவதோடு மொத்த நீரும் வீணாகக் கடலில் போய் கலக்கும் சூழல் தான் உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.