Skip to main content

எனக்கு நீ வேணும்... -ஆண் போலீஸ்! நீ எனக்கு வேண்டாம்... -பெண் போலீஸ்! இந்தா சஸ்பெண்ட்... -எஸ்.பி. அதிரடி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

ஊருக்குத்தான் உபதேசமா... சட்டத்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் குற்றம் தானே... அதிலும் உடன் பணிபுரியும் சக பெண் பணியாளர்களுக்கே தொல்லை கொடுத்தால்...? சஸ்பெண்ட் தான் என அறிவித்துவிட்டார் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ் அவர்கள்.
 

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஏட்டு சுப்பிரமணியம். ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வருகிறார் சுமதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுமதி போலீஸ் மீது தீராத காதல் ஏட்டு சுப்பிரமணிக்கு. சுமதியிடம் தொலைபேசியில் "ஏய் நீ அழகாக இருக்கே... என் மனம் உன்னையே சுற்றி வருகிறது" என அவ்வப்போது காதல் கவிதை பேசி வந்துள்ளார். அதற்கு சுமதி ஒரு கட்டத்தில் ''எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இனிமேல் போன் பேசாதே'' என கடுமையாக கூறியிருக்கிறார்.

erode district police love suspend sp action

அப்போதும் விடாத ஏட்டு சுப்பிரமணி முகநூல் பக்கத்தில் சுமதியை வர்ணித்து பதிவுகள் தொடர்ந்து போட்டு வந்துள்ளார். சுமதி, ஏட்டு சுப்பிரமணியிடம் அடி பணியாமல், பாடம் கற்பிக்க முடிவு செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் சுமதி, ஈரோடு எஸ்.பி. சக்திகணேசனிடம் ஆதாரத்துடன் புகார் மனு கொடுத்தார்.
 

இது சம்பந்தமாக துறை ரீதியாக விசாரணை நடத்த எஸ்.பி. சக்திகணேசன் ஈரோடு மகளிர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் ஏட்டு சுப்பிரமணி முகநூலில் அவதூறாக பெண் போலீஸ் சுமதி பற்றி பதிவிட்டது உண்மை என தெரிய வந்தது. மேலும் சுமதியும் ஏட்டு சுப்பிரமணியனும் ஈரோடு ஆயுதப்படையில் சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். அப்போதிருந்தே இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.
 

இந்தநிலையில் பெண் போலீஸ் சுமதியை தன் இச்சைக்கு வீழ்த்த முடியாமல் தவறான  வகையில் ஏட்டு சுப்பிரமணியன் தனது முகநூல் பக்கத்தில் அவதூறுகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது. இதை முழுமையாக விசாரித்து அறிக்கையாக எஸ்.பி.யிடம் பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தார். இதன் பேரில் ஏட்டு சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏட்டு  சுப்பிரமணியன் மீது முறையாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் ஈரோடு டவுன் போலீசார்க்கு எஸ்.பி.  உத்தரவிட்டுள்ளார்.
 

பெண் போலீசை சீண்டிய ஆண் போலீசை காப்பாற்ற நினைக்காமல் பெண் போலீஸ் பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுத்த எஸ்.பி. சக்தி கணேசனை மகளிர் போலீசார் பலரும் பாராட்டினார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்