Skip to main content

ஈரோட்டில் களைக்கட்டிய ஹோலி பண்டிகை!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

பண்டிகை, திருவிழா என்றால் அது எல்லோருக்கும் ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும் அப்படித்தான் வட இந்தியர்களுக்கு குதூகலத்தைக் கொடுப்பது ஹோலி பண்டிகை. 

இந்தியா முழுவதும் இது உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை களையிழந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக  ஈரோடு மாவட்டத்தில் வட இந்தியர்கள் ஹோலியை உற்சாகமாக கொண்டாடினர். 

ERODE DISTRICT HOLI FESTIVAL CELEBRATION

ஈரோடு இந்திரா நகர் ஜெயின் கோவில் பகுதி, காமராஜ் வீதி, பிருந்தா வீதி, வளையக்கார வீதி, விவிசி ஆர் நகர், கருங்கல் பாளையம், திருநகர் காலனி, கடைவீதி ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம் எஸ் காம்பவுண்ட், கே. ஏ‌.எஸ். நகர் என நகரின் மையத்தில் பத்தாயிரம் வட இந்தியர்கள் உள்ளார்கள். 


இந்த இடங்களில் வசித்து வரும் அவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வயது பாகுபாடு இன்றி ஒருவர் மீது ஒருவர் வண்ண கலர் பொடிகளை தூவியும் உற்சாகமாகவும் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். இளம் பெண்கள் இசைக்கேற்ப நடனங்கள் ஆடி ஈரோடு வீதிகளில் காண்போரை பரவசப்படுத்தினார்கள். மேலும் தங்கள் வீடுகளில் செய்த விதவிதமான இனிப்பு பலகாரங்களை மற்றவர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

தேர்தல் புறக்கணிப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Erode, people hold banners saying they are going to boycott the elections

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு சில பகுதிகளில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகளைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் இன்று சாலையோரம், ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் சென்ற வாகன ஓட்டிகள் இந்தப் பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப் பேனரில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது, “ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தனிநபர் ஒருவர் பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதைக் கண்டித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் கிட்டத்தட்ட 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனைக் கண்டித்து வருகிற பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என எழுதப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி அந்தப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை அடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பேனர் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.