புற்றுநோயால் அவதி; விபரீத முடிவெடுத்த கூலித்தொழிலாளி

erode district gobichettipalayam cancer patient inicent

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜா. பழனிச்சாமி தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பழனிச்சாமிக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும்கோவையில் நாட்டு வைத்தியமும் பார்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அதிகாலை பழனிச்சாமிக்கு கழுத்து வலி அதிகமாக இருந்தது. இதனைப் பொறுக்க முடியாமல் வீட்டில் இருந்த கருக்கு அருவாளால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

cancer Erode hospital police
இதையும் படியுங்கள்
Subscribe