Skip to main content

ஈரோட்டில் கனமழை; பொதுமக்கள் கடும் அவதி

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

erode district fully heavy rain last two days

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கவுந்தப்பாடி பகுதியில் 60 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பெய்த இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்தது.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக இரவு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக ஈரோடு புறநகர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்தகுட்டைமேடு பகுதியில் 94.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போல் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று 2வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. பவானிசாகர் பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதைப்போல் கொடிவேரி அணை, சத்தியமங்கலம், நம்பியூர், குண்டேரிப்பள்ளம், கோபி, வறட்டுப்பள்ளம், பெருந்துறை போன்ற பகுதிகளிலும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

 

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நம்பியூர் அடுத்த கரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கம் மேட்டுபுதூர் பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இரவு நேரத்தில் மழை நீர் புகுந்ததால் இந்த வீட்டைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மழை தண்ணீரில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் வந்தன. இதனால் விடிய விடிய தூங்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். காலை மழைநீர் வடியத் துவங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

 

இந்தப் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேறாமல் அந்தப் பகுதியிலேயே தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மழைக்காலங்களில் இது போன்று தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் ரம்மியமான காட்சி அளித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: எலந்தகுட்டை மேடு - 94.40, தாளவாடி - 87, பவானிசாகர் - 79, கொடிவேரி அணை - 73, சத்தியமங்கலம் - 65, நம்பியூர் - 63, குண்டேரி பள்ளம் - 60, கோபி - 47.20, வரட்டு பள்ளம் - 16, ஈரோடு- 12, பெருந்துறை - 5, கவுந்தப்பாடி- 2.40. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.