erode district bhavani sagar dam water released cm palanisamy order

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து நாளை (01/07/2020) முதல் அக்டோபர் 28- ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் கூறு வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 01/07/2020 முதல் 28/10/2020 வரைதண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

Advertisment

இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரைசிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.