Skip to main content

மீண்டும் களைகட்டிய ஈரோடு மாட்டுச்சந்தை...!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

தேர்தல் விதிமுறைகள் என்ற பெயரில் அதிகம் அல்லல் பட்டது சாதாரண தொழிலாளியும், விவசாயியும், வியாபாரிகளும் தான். ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை நடக்கும் மாட்டுச் சந்தை பிரபலமானது. ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும் வெளி மாநில வியாபாரிகள் வரை இங்கு நேரில் வந்து வியாபாரம் செய்வார்கள் அந்த ஒரு நாள் மட்டும் சுமார் ஐந்து கோடி பணப்புழக்கம் இங்கு இருக்கும். 

 

cow market


ஆனால் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் தரப்படுகிறதா என்பதை கண்காணிக்க இறங்கிய பறக்கும் அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணித்ததோ இல்லையோ வியாபாரிகளை வலைத்து வலைத்து பிடித்தது.  இதையடுத்து உரிய ஆவணமின்றி ரூ .50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தனர. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ 9. கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டிய பிறகு பணம் உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள் அதிகாரிகள்.

 


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்ததால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில்கள் மாட்டுச் சந்தைகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல வியாபாரிகள் அச்சப்பட்டனர்.

 

 

குறிப்பாக ஈரோடு  மாட்டு சந்தைக்காக வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா,  தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.  மேலும் தேனி கரூர் சேலம் திண்டுக்கல் திருநெல்வேலி திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கூடுதலாக வருவார்கள்.  ஆனால் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி முதல் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவில் மட்டுமே வந்திருந்தனர்.  ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியவில்லை..  ஒரு வாரம் ரூ.5 கோடி வரை வியாபாரம் இந்த சந்தை நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கடந்த ஒரு மாதமாக லட்சக்கணக்கில் கூட வியாபாரம் நடக்கவில்லை.

 

இந்நிலையில் சென்ற  18ஆம் தேதியோடு தேர்தல் முடிவடைந்ததால்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டது. 

 


இதையடுத்து இன்று கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.  மாடுகள் வரத்தும் அதிகமாக இருந்தது. இன்று நடந்த  சந்தையில்  பசுமாடுகள் 800,  எருமை மாடுகள் 600,  வளர்ப்பு கன்றுகளை 200  விற்பனையாயின.  இதனால் இன்று மீண்டும் சந்தை  களை கட்டியது. அப்படா, மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட முடிந்ததே... என்று மாடுகளின் உரிமையாளர்களும் வியாபாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.