Skip to main content

மகள்களை சீரழித்த பாவிக்கு 40 ஆண்டுகள் சிறை...! - ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

தந்தை என்ற தகுதியையே தரம் கெட்டதாய் மாற்றி எந்த மிருகமும் செய்யாத துணியாத கொடுமையை தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு செய்த அந்த மகாபாவிக்கு இதுதான் சரியான தண்டனை என்ற குரல்கள்  நீதிமன்றம் முழுக்க இன்று காலை எதிரொளித்தது.

ஆம் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறும் அந்த சம்பவம் இதுதான். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது கருமாண்டி செல்லிபாளையம் என்ற ஊர். இங்கு வசிக்கும் குருநாதன் ஒரு கட்டிட தொழிலாளி. குருநாதனுக்கு முதலில் ஒரு மனைவி அவர் என்ன காரணத்தினாலோ இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். குருநாதனுக்கு குடிப்பழக்கம் நீண்ட நாளாக இருந்து வந்ததோடு சதா எந்நேரமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார்.

 

 Erode court jury verdict….

 

இந்தநிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் எட்டு வயதில் ஒன்றும்,  ஏழு வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளது. குடிகாரரான குருநாதன் போதை போல காமத்திலும் எல்லை மீறி தான் தனது மனைவியிடம் நடந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் குருநாதன் பெற்றெடுத்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளிடமே பாலியல் சீண்டல் செய்துள்ளார். குழந்தைகள் என்றும் பாராமல் போதையில் பாலியல் சீண்டலில் குழந்தைகளை சீரழிக்க தொடங்கியிருக்கிறார். இந்தக் கொடுமையை நேரில் கண்ட அவரது மனைவியை நெஞ்சம் பதறிப்போய் இப்படி ஒரு தகப்பன் உலகத்திலேயே இருக்கக்கூடாது என முடிவெடுத்து சென்ற 2016ஆம் ஆண்டு  காவல்நிலையம் சென்று பெற்ற குழந்தை என்றும் பாராமல் என் கணவன் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என புகார் கொடுத்தார். 

 

 Erode court jury verdict….


அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் குருநாதனை கைது செய்தனர். அந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடமாக நடந்து வந்தது. அதன் தீர்ப்பு தான் இன்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி வழங்கிய தீர்ப்பு இதுதான்,

பெற்ற குழந்தைகளுக்கு அன்பும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கவேண்டிய ஒரு தந்தை மிருகமாக மாறி குழந்தைகளை சீரழித்தது நிரூபணமாகியுள்ளது. ஆகவே இதற்குத் தண்டனையாக ஒவ்வொரு குழந்தையை சீரழித்ததற்கும் தலா இருபது ஆண்டுகள் என மொத்தம் நாற்பது ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் செலுத்த வேண்டும். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

பெற்ற குழந்தைகளை சீரழித்த இந்த மகாபாவிக்கு  40 ஆண்டுகாலம் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரண்டு லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்புக்குப் பிறகு குற்றவாளி குருநாதன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.