Skip to main content

மகள்களை சீரழித்த பாவிக்கு 40 ஆண்டுகள் சிறை...! - ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

தந்தை என்ற தகுதியையே தரம் கெட்டதாய் மாற்றி எந்த மிருகமும் செய்யாத துணியாத கொடுமையை தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு செய்த அந்த மகாபாவிக்கு இதுதான் சரியான தண்டனை என்ற குரல்கள்  நீதிமன்றம் முழுக்க இன்று காலை எதிரொளித்தது.

ஆம் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறும் அந்த சம்பவம் இதுதான். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது கருமாண்டி செல்லிபாளையம் என்ற ஊர். இங்கு வசிக்கும் குருநாதன் ஒரு கட்டிட தொழிலாளி. குருநாதனுக்கு முதலில் ஒரு மனைவி அவர் என்ன காரணத்தினாலோ இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். குருநாதனுக்கு குடிப்பழக்கம் நீண்ட நாளாக இருந்து வந்ததோடு சதா எந்நேரமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார்.

 

 Erode court jury verdict….

 

இந்தநிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் எட்டு வயதில் ஒன்றும்,  ஏழு வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளது. குடிகாரரான குருநாதன் போதை போல காமத்திலும் எல்லை மீறி தான் தனது மனைவியிடம் நடந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் குருநாதன் பெற்றெடுத்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளிடமே பாலியல் சீண்டல் செய்துள்ளார். குழந்தைகள் என்றும் பாராமல் போதையில் பாலியல் சீண்டலில் குழந்தைகளை சீரழிக்க தொடங்கியிருக்கிறார். இந்தக் கொடுமையை நேரில் கண்ட அவரது மனைவியை நெஞ்சம் பதறிப்போய் இப்படி ஒரு தகப்பன் உலகத்திலேயே இருக்கக்கூடாது என முடிவெடுத்து சென்ற 2016ஆம் ஆண்டு  காவல்நிலையம் சென்று பெற்ற குழந்தை என்றும் பாராமல் என் கணவன் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என புகார் கொடுத்தார். 

 

 Erode court jury verdict….


அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் குருநாதனை கைது செய்தனர். அந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடமாக நடந்து வந்தது. அதன் தீர்ப்பு தான் இன்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி வழங்கிய தீர்ப்பு இதுதான்,

பெற்ற குழந்தைகளுக்கு அன்பும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கவேண்டிய ஒரு தந்தை மிருகமாக மாறி குழந்தைகளை சீரழித்தது நிரூபணமாகியுள்ளது. ஆகவே இதற்குத் தண்டனையாக ஒவ்வொரு குழந்தையை சீரழித்ததற்கும் தலா இருபது ஆண்டுகள் என மொத்தம் நாற்பது ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் செலுத்த வேண்டும். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

பெற்ற குழந்தைகளை சீரழித்த இந்த மகாபாவிக்கு  40 ஆண்டுகாலம் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரண்டு லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்புக்குப் பிறகு குற்றவாளி குருநாதன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.