ஈரோடு கல்லூரி மாணவன் தற்கொலை..... மாணவர்கள் போராட்டம்

g

ஈரோடு அருகே உள்ளது எழுமாத்தூர். இங்கு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த தினேஸ் குமார் என்ற மாணவன் இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமுற்ற மாணவர்கள் மாணவன் தினேஸ் குமார் சாவுக்கு கல்லூரி பேராசிரியர்களே காரணம் தினேஸ் குமார் கல்லூரிக்கு வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் 15 நாள் சஸ்பென்ட் செய்தது. இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என ஈரோடு சிவகிரி சாலையில் மறியல் செய்தனர்.

g

போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இறந்த மாணவன் தினேஸ் குமாருக்கும் சிவகிரி கல்லூரியில் உள்ள சில மாணவர்களுக்கும் முன்பே முன்விரோதம் இருந்ததாகவும் அதில் இரு தரப்பும் அடிதடி வரை சென்றுறுள்ளனர். மேலும் தினேஸ் குமார் ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததும் அம் மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

15 நாள் சஸ்பென்ட் செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா?காதல் தோல்வியா? என மொடக்குகுறிச்சி போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

government
இதையும் படியுங்கள்
Subscribe