Skip to main content

தமிழக கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவிகளின் மரணங்கள்....

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

தங்கள் மகள் நல்ல கல்வி கற்று உயர்நிலைக்கு வர வேண்டும் என்ற கனவுகளோடு உயர் கல்விக்காக பல ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அலைந்து திரிந்து ஒரு வழியாக இந்த கல்லூரி நல்ல கல்லூரி என நம்பி ஏதாவது ஒரு கல்லூரியில் மகளை சேர்த்து அங்கேயே உள்ள விடுதியில் தங்கி படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள்.
 

erode incident


அப்படித்தான் ஆயிரம் கனவுகளோடு மாணவி பாத்திமாவை சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்த்து படிக்க வைத்தார்கள் கேரளாவைச் சேர்ந்த அவரின் பெற்றோர்கள். ஆனால் ஏதோ ஒரு விபரீத்தில் பலியாகி மாணவி பாத்திமா சடலமாகத் தான் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

அந்த வரிசையில் இப்போது நாமக்கல் மாணவியும் "திடீர் வலிப்பு" என்ற பெயரில் இறந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.  இவரது மகள் 19 வயது சாதனா. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். மாணவி சாதனா அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாணவிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த மாணவி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த மாணவியை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவி இறப்புக்கு வலிப்பு தான் காரணமா, அல்லது தற்கொலையா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது உடனே தெரியவில்லை. இவை குறித்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜு மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.