Skip to main content

ரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது

Published on 18/10/2019 | Edited on 19/10/2019

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்பாட்டில் அன்னை இன்பிரா என்ற பெயரில் பைப் மற்றும் சில இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனராக இருப்பவர் பெருந்துறையை சேர்ந்த அசோக்குமார். இந்த அசோக்குமார் மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமியின் அக்கா மகன்.
 

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் வரை இந்த நிறுவனத்தின் தொழில் நீடித்துள்ளது. இப்போது ஆந்திரா மாநில போலீல் நேரடியாக ஈரோடு வந்து அசோக்குமாரை அள்ளிக் கொண்டு போய் அங்கு கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. ரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி என்று தான் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். ஜி.எஸ்.டி. வரியே 450 கோடி மோசடி என்றால், அடேங்கப்பா அப்போது எத்தனை கோடிக்கு தொழில் நடத்தியிருக்க வேண்டும் என்ற அதிர்ச்சியான கேள்வியுடன் எல்லா டாக்குமென்ட்டுகளையும் அலசி ஆராய்ந்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தது.

erode business man gst scam 450 crores gst officers investigation



ஆந்திரா அரசிடம் போடப்பட்ட  ஒப்பந்தப்பணிகளை முடியாமலேயே செய்து முடித்ததாக போலி ரசீதுகளை அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் சப்ளை செய்ய வேண்டிய பைப்புக்களை கொடுக்காமலேயே கொடுத்தாகவும்  விற்பனை செய்ததாக வழங்கிய  போலி ரசீது மற்றும் ஆவணங்களை போலீசார் எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆந்திரா மாநிலம்  ஜி.எஸ்.டி.,- யின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆய்விலும் விசாரனையிலும் உள்ளார்கள். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு பல பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் ரகசியமாக ரெய்டு நடத்தியுள்ளார்கள். சோதனையில் போலி ரசீதுகளை கைப்பற்றியுள்ளனர். அதற்கு மட்டும்  மொத்தம் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு  மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று அசோக்குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
 

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வைத்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வருகிற 30ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அசோக்குமாரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்துள்ளார்கள்.  இவர் கடந்த ஒரு வருடத்தில் 2018 முதல் ஆகஸ்ட் 2019 ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமி, 1994ல் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியசாமிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தான் சீட் வழங்க ஏற்பாடு செய்தார் என்பதால், அதிகாரிகள் அமைச்சருக்கு வேண்டியவர்களையும் விசாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.