Skip to main content

குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் ஆயுதங்கள்... நக்கீரன் ஆசிரியர் பேச்சு

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

அறிவு வேள்வியாக தொடர்ந்து 15 வருடமாக ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்வாக அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பல்வேறு ஆளுமைகள் கொன்டவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றி வருகிறார்கள்.
 

இதில் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ஆறாம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் 'அளவுக்கு மீறினால்' என்ற தலைப்பில் உரையாற்றினார். 


 

nakkeeran gopal speech



''இப்போதெல்லாம் குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு உண்மையாக இருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியும் செல்போனும்தான். தொலைக்காட்சியில் வருகிற தொடர்கள் பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டினாலும், அது குடும்பத்தில் பாசம், அன்பு, நட்பை பேணுவதாக இல்லை. அதேபோல் செல்போனில், வாட்ஸ் - அப் பில் பலர் கூட்டு குடும்பத்தையே நடத்துவதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் குடும்ப உறவுகளை முழுமையாக சீர்குலைக்கும் ஆயுதங்களாக இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த சமூகத்தில் குடும்ப உறவே இல்லாத நிலை ஏற்படுகிற சமூகமாக இன்றைய சூழல் வெளிக்காட்டி வருகிறது. ஆகவே இதிலிருந்து நமது குழந்தைகளை தற்காத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது'' என கூறினார்.


 

 

erode book festival 2019 Jegath Gaspar


 
இதனைத் தொடர்ந்து 'தலை நிமிர் காலம்' என்ற தலைப்பில் ஜெகத் கஸ்பர் உரையாற்றுகையில், ''இன்றைய மனித சமூகம் இரண்டு போதையில் உள்ளது. ஒன்று கடவுள் என்கிற ஆன்மீக போதை. இரண்டாவது மது போதை. இந்த இரண்டும் ஆய்வுக்கு உட்பட்டது தான். தமிழ் மொழி எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. தமிழ் மொழியில் இல்லாத பண்பாட்டு தீர்வு உலக இலக்கியத்தில் இல்லை. இன்றைய காலம் மிகவும் கடினமான காலமாக உள்ளது. சமூகத்தில் தமிழ் மொழியில்தான் குடும்பம், உறவு, பண்பாடு என எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. எனவே தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியில் நமது குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும். அதோடு தமிழின் தொன்மையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உலகில் உள்ள ஏராளமான மொழிகள் அழிந்ததுபோல் தமிழை அழிக்க பல சக்திகள் பூத்துள்ளது. ஆகவே நாம் இன்று தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மைகளை நாம் உலகுக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியில் உள்ளோம். அதற்கு இது போன்ற அறிவு சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.