ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையில் இருந்து 10,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 10,156 கனஅடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 105 அடியில் நீடிக்கிறது.